• Download mobile app
18 Sep 2025, ThursdayEdition - 3508
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கொண்டனூர் மலைவாழ் கிராம மக்களுக்கு முகக்கவசம் வழங்கும் நிகழ்வு

October 3, 2020 தண்டோரா குழு

கோயமுத்தூர் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அக்டோபர் 02, தேசத்தந்தை மகாத்மா காந்தியடிகளின் பிறந்த தினத்தை முன்னிட்டு கோவிட் 19 விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கல்லூரியின் என்.எஸ்.எஸ் சார்பாக மலைவாழ் மக்களுக்கு முகக்கவசம் வழங்கப்பட்டது.

கொண்டனூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் 500 –க்கும் மேற்பட்ட மலைவாழ் கிராம மக்களுக்கு முகக்கவசங்கள் வழங்கி மகாத்மா காந்தியடிகளின் மனிதநேயத்தைப் பறைசாற்றினர். என்.எஸ்.எஸ் ஒருங்கிணைப்பாளர்களான பேராசிரியர்கள் பிரகதீஷ்வரன், சுபாஷினி மற்றும் நாகராஜ் ஆகியோர் இந்நிகழ்வை முன்னின்று நடத்தினர்.

மேலும் படிக்க