• Download mobile app
06 Feb 2026, FridayEdition - 3649
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கொடுங்கையூரில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த 2 சிறுமிகளின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் – உயர்நீதிமன்றம்

November 3, 2017 தண்டோரா குழு

சென்னை கொடுங்கையூரில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த 2 சிறுமிகளின் குடும்பங்களுக்கு தலாரூ.10 லட்சம் வழங்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையில் பெய்து வந்த கனமழை காரணமாக கொடுங்கையூரைச் சேர்ந்த பாவனா, யுவஸ்ரீ என்ற இரண்டு சிறுமிகள் நேற்று முன் தினம்(நவ 1) மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர்.இச்சம்பவம் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யுமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த 2 சிறுமிகளின் குடும்பங்களுக்கு அரசு தரப்பில் ரூ 5 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்ட நிலையில்,கூடுதல் நிவாரண தொகையாக தலா ரூ.10 லட்சம் வழங்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் படிக்க