• Download mobile app
28 Oct 2025, TuesdayEdition - 3548
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கொச்சியில் மெட்ரோ ரயிலை திறந்து வைத்து மோடி பயணம்

June 17, 2017 தண்டோரா குழு

கேரள மாநிலம் கொச்சியில் இன்று மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்து அதில் பயணம் செய்தார்.

கேரள மாநிலம் கொச்சியில் மெட்ரோ ரயில் திட்ட பணிகள் கடந்த 2013ம் ஆண்டு தொடங்கியது. ஆலுவா முதல் கொச்சி மகாராஜா கல்லூரி வரை 25 கி.மீ தொலைவிற்கு மெட்ரோ ரயில் திட்ட பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. கொச்சியில் உள்ள ஜவஹர்லால் நேரு சர்வதேச மைதானத்தில் முதல் மெட்ரோ ரயில் சேவை தொடக்க விழா இன்று காலை 11 மணிக்கு நடைபெற்றது.

கொச்சி மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.சேவையை தொடங்கி வைத்த பின் மெட்ரோ ரயிலில் அவர் பயணம் செய்தார். அவருடன் கேரள முதல்வர்.பினராயி விஐயன், ஆளுனர் சதாசிவம், வெங்கையா நாயுடு உள்ளிட்டோர் நிகழ்சியில் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க