• Download mobile app
23 Jul 2026, ThursdayEdition - 3816
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கே.ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கேலக்ஸி 2023 கலை விழா !

October 7, 2023 தண்டோரா குழு

கோவை சரவணம்பட்டி சாலையில் உள்ள கே.ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கேலக்ஸி 2023 எனும் கலை விழா நடைபெற்றது.

இவ்விழாவில் 4000 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். நடனம், பேச்சுப்போட்டி,ஓவியம்,சமையல் , தனிநபர் நடிப்பு, குறும்படம்,புகைப்படம் போன்ற பல பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன. இவ்விழாவில் கல்லூரியின் காட்சித் தொடர்பியல் துறைத் தலைவர் முனைவர் சார்லஸ் அவர்கள் வரவேற்புரை வழங்கினார்.

கல்லூரியின் முதல்வர் முனைவர் இரத்தினமாலா தலைமையுரை ஆற்றினார். கல்லூரியின் செயலர் முனைவர் வனிதா அவர்கள் சிறப்புரையாற்றினார்.

அவர் பேசுகையில்,

கலை என்பது ஒரு தவம், அதில் மனம், உடல், ஆன்மா மூன்றும் ஒரு நேர்கோட்டில் இணையும் பொழுதுதான் முழுமை பெரும். மேலும் தான் கற்றுக்கொண்டதைப் பிறர்க்கு எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் ரசனையோடு தருபவன் கலைஞன் எனக் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் சிறப்புரையாளராகப் பிரபல நடனக்கலைஞர் பாபி எரிக் கலந்து கொண்டு பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகளை வழங்கிச் சிறப்புரையாற்றினார் .

அவர் பேசும்போது,

மாணவர்கள் சமுதாயத்தில் எவ்வாறு வாழ வேண்டும் என்பதையும் குறிப்பாகப் பெண்கள் தங்களை எவ்வாறு வடிவமைத்துக் கொள்ளவேண்டும் என்பதையும் பேசினார். மேலும் நம்பிக்கைக்கும் தெரிந்து கொள்வதற்கும் இடையிலான வேறுபாடுகளை மாணவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும் எனக் கூறினார்.

மேலும் விழா மேடையில் மாணவர்களின் ஆடல்,பாடல்,இசை,ஆடை அலங்கார அணிவகுப்பு போன்றவை நடைபெற்றன. நிறைவாக கல்லூரியின் மாணவர் நலத் தலைவர் முனைவர் பூவலிங்கம் நன்றியுரையாற்றினார்.

மேலும் படிக்க