• Download mobile app
09 Apr 2026, ThursdayEdition - 3711
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கே.சி.டபிள்யூ.கல்லூரியில் நடைபெற்ற இவான்ஸா ஆடை அலங்கார அணிவகுப்பு நிகழ்ச்சி

April 12, 2023 தண்டோரா குழு

கோவை கே.சி.டபிள்யூ.கல்லூரியில் நடைபெற்ற இவான்ஸா ஆடை அலங்கார அணிவகுப்பு நிகழ்ச்சியில் கல்லூரி மாணவிகள் அசத்தலான ஆடைகள் அணிந்து அணி வகுப்பு நடத்தினர்.

கோவை அவினாசி சாலையில் உள்ள கே.சி.டபிள்யூ.கல்லூரி அழகு கலை மற்றும் ஆடை வடிவமைப்பு துறை சார்பாக இவான்ஸா எனும் ஆடை அலங்கார அணி வகுப்பு நிகழ்ச்சி கல்லூரி அரங்கில் நடைபெற்றது.

முன்னதாக இதன் துவக்க விழா கல்லூரியின் அறங்காவலர் நந்தினி ரங்கசாமி தலைமையில் நடைபெற்றது.இதில் அழகு கலை மற்றும் ஆடை வடிவமைப்பு துறை தலைவர் சாந்தி ராதாகிருஷ்ணன் அனைவரையும் வரவேற்று பேசினார். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பெங்களூரு ஆர்மி ஆடை அலங்கார தொழில் நுட்ப கல்லூரியின் முதல்வர் கதிர்வேலு கலந்து கொண்டார்.

தொடர்ந்து நடைபெற்ற ஆடை அலங்கார அணி வகுப்பு நிகழ்ச்சியில்,கே.சி.டபிள்யூ.கல்லூரியின் அழகு கலை மற்றும் ஆடை வடிவமைப்பு துறை மாணவிகள் தயாரித்த வண்ணமயமான ஆடைகளை சிறுமிகள் அணிந்தபடி மேடையில் ஒய்யார நடை நடந்தனர்.இதனை தொடர்ந்து இதே துறையின் இரண்டு மற்றும் மூண்றாமாண்டு மாணவிகள் தயாரித்த நவீன ரக ஆடையை அணிந்தபடி மேடையில் மாணவிகள் நடந்தனர்.இதில் நடுவர்களாக கோவையின் முக்கிய தொழில் பெண் முனைவோர்கள் ரஜதா, மோனிஷா, ஸ்வேதா ஆனந்தி,அபர்ணா சுங்கு, தேன்மொழி,புஷ்பா ஆகியோர் கலந்து கொண்டு சிறந்த ஆடை வடிவமைப்பாளர்களை தேர்வு செய்தனர்.

மாலையில் பரிசளிப்பு விழா நடைபெற்றது. இதில் விழாவிற்கு வந்த அனைவரையும் கே.சி.டபிள்யூ. கல்லூரி முதலவர் மீனா வரவேற்று பேசினார்.இதில் விழாவில் சிறப்பு அழைப்பாளராக அவிநாசிலிங்க மனையியல் பல்கலைக்கழக முதல்வர் டாக்டர். என்.வாசுகி கலந்து கொண்டு பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார்.

மேலும் படிக்க