• Download mobile app
15 May 2024, WednesdayEdition - 3017
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் மினார் குழுமத்தின் புதிய லோஹித் டிஎம்டி எப்இ 500 டி ஸ்டீல் அறிமுகம்

November 21, 2020 தண்டோரா குழு

தமிழகத்தில் முதல் முறையாக கோவையில் மினார் குழுமத்தின் புதிய லோஹித் டிஎம்டி எப்இ 500 டி ஸ்டீல் அறிமுகம் செய்யப்பட்டது.

கோவை கேரளாவை சேர்ந்த மினார் குழும நிறுவனங்கள், தனது புதிய பிராண்ட் லோஹித் டிஎம்பி எப்இ 500 டி ஸ்டீல் பார்களை தமிழ்நாட்டில் முதல் முறையாக கோவையில் அறிமுகம் செய்தது.

கோவை ரெசிடென்ஸி ஓட்டலில் நடந்த அறிமுக விழாவில் தென்னிந்திய அளவில் முன்னணி நடிகர் அருண் விஜய் மற்றும் டிஎம்டி ஸ்டீல் பார் டீலர்கள் பங்கேற்றனர்.இதில்,மினார் குழும நிறுவனங்களின் நிர்வாக இயக்குனர் முகமது ஷபி நிருபர்களிடம் கூறியதாவது:

லோஹித் டிஎம்டவி எப்இ 500டி’ என்ற ஸ்டீல் பார்கள் தமிழகத்தில் நவம்பர் 20, 2020 வெள்ளியன்று கோவையில் முதல்முறையாக அறிமுகம் செய்கிறது.இந்த பிராண்ட், கேரளாவில் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. எங்களது தரம் மற்றும் சிறப்புத்தன்மையால் விற்பனை வெற்றிகரமாக துவங்கியுள்ளது. கேரளா சந்தையை தொடர்ந்து, தற்போது தமிழ்நாட்டில் கோவையில் அடியெடுத்து வைத்து, டீலர்கள் மற்றும் விநியோக தொடரை உருவாக்கவுள்ளோம்.தொடர்ந்து ஏற்படும் விற்பனை, தேவையை ஆராய்ந்து 150 கோடி ரூபாய் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளோம்.
சரியான தரம், வலிமைக்கு நாங்கள் உத்தரவாதம் அளிக்கிறோம். சரியான விநியோக தொடர், டீலர்களை அமைத்து விற்பனை செய்யவுள்ளோம். கேரளாவில் நாங்கள் வெற்றி பெற காரணமாக அமைந்தது, தரமும் சேவையும் தான்.

இவ்வாறு, அவர் கூறினார்.

மேலும் படிக்க