May 6, 2021 தண்டோரா குழு
சர்வதேச தொற்றாக மாறியுள்ள கொரோனா 19, மிகவும் ஆபத்தான சூழ்நிலையை உருவாக்கியுள்ளது. அனைத்து நாடுகளும் கடினமான சூழ்நிலையை எதிர்கொண்டுள்ள நிலையில் இந்தியா இரண்டாவது அலையில் சிக்கி தவித்துக் கொண்டுள்ளது. படுக்கை வசதிகள், மருத்துவ வசதிகள், ஆள் பற்றாக்குறை, ஆக்ஸிஜன், மருந்துகள் தட்டுப்பாட்டில் தவித்து வருகிறது.
இந்த சமயத்தில் மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை தரும் தேர்வுகள் வேண்டும். இது, ஆக்சிஜன் தேவை, வெண்டிலேட்டர் மற்றும் பிற நவீன சாதனங்களின் பயன்பாட்டை குறைக்கும். இந்நிலையில், சக்தி ஏ.பி.டி குழுமங்களின் சார்பில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்
மிராக்கிள்’ ஆரோக்கிய பானம் அறிமுகப்படுத்தபட்டுள்ளது.
இது குறித்து ஏபிடி சக்தி குழும நிறுவனங்களின் தலைவர் எம்.மாணிக்கம் கூறுகையில்,
ஏபிடி மிராக்கிள் விட்டமின் சி பானத்தை கடந்த 19 ஆண்டு கால ஆராய்ச்சிக்கு பின் அறிமுகம் செய்துள்ளது. இந்த பானத்தில் 1000 மில்லி கிராம் வைட்டமின் சி, 500 மிலி கிராம் லிசின், 90 மிலி கிராம் புரோலின் மற்றும் 3000 மிலி கிராம் பாஸ்போலிபிட்ஸ் உள்ளன. உடலில் உள்ள செல்களில் ஏற்பட்டுள்ள பாதிப்பை சரி செய்ய பாஸ்போ லிபிட் ஒரு நுண்ணுாட்ட சத்தாகும்.
கோவையில் உள்ள அனைத்து மருத்துவமனைக்கும் கடந்த ஒராண்டாக வழங்கப்பட்டு, 20,000க்கும் மேற்பட்டோர் பயனடைந்துள்ளனர். கோவிட் 19 தொற்றுக்கு மிராக்கிள் பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள் பற்றி ஆராய்ச்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இது பற்றி இந்திய அடிப்படை மற்றும் பயன்பாட்டு மருத்துவ ஆராய்ச்சி பத்திரிக்கையில் (Indian Journal of Basic and Applied Medical Research) வெளியாகியுள்ளது. நான்கு கட்டமாக நடத்தப்பட்ட இந்த ஆய்வு, சர்வதேச அளவில் பெயர் பெற்ற, வைட்டமின் சி சிகிச்சையில் முன்னணியில் உள்ள அமெரிக்காவில் உள்ள ரியோர்டன் வெல்னஸ் கிளினிக்கிற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
அவர்கள் இந்த பணியை பராட்டியதோடு, கோவிட் 19 தொற்றால் ஏற்படும் கடும் பாதிப்பிலிருந்து விடுபட மக்களுக்கு மிராக்கிள் ஒரு நல்ல தேர்வு என தெரிவித்துள்ளனர்.
கோவிட் 19 நோய் தொற்றால் ஏற்படும் கடும் பாதிப்பை மிரக்கிள் எவ்வாறு தவிர்க்கிறது என்பது பற்றிய ஆய்வறிக்கையும் இதனுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த நோய் ஆரம்ப கட்டத்திலேயே தவிர்க்கப்படுவதுடன், கடும் பாதிப்புகளை தவிர்க்கிறது. நோய் தொற்றில் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு மிராக்கிள் ஒரு மாபெரும் உதவியாக திகழ்கிறது. நோய் வராமல் தடுக்க நாள் ஒன்றுக்கு 2 பாக்கெட்டுகள் அருந்தலாம். நோய் தொற்றில் சிகிச்சை பெறுவோர் 4 முதல் 6 பாக்கெட்டுகள் குடிக்கலாம்.
மாம்பல சுவையில் , சர்க்கரை சேர்க்கப்பட்டு அல்லது சர்க்கரை இல்லாமல் கிடைக்கும். ஒரு பாக்கெட்டின் விலை 50 ரூபாய். சர்க்கரை இல்லாமல் 60 ரூபாய். அனைத்து வயதினருக்கும் ஏற்ற இயற்கையான பானம் மற்றும் மாம்பழத்தின் சுவை கொண்டது. கோவிட் 19 நோய் தொற்றிலிருந்து மீளவும், பரவாமல் கட்டுப்படுத்தவும் இது உதவும் என ஏபிடி நம்பிக்கை கொண்டுள்ளது. குறிப்பிட்ட கடைகளிலும், www.mirakle.life என்ற இணையத்தளம் வழியாகவும் இதனை வாங்கலாம்.
இவ்வாறு, அவர் கூறினார்.