• Download mobile app
06 Jun 2026, SaturdayEdition - 3769
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கேஸ் சிலிண்டர் விலை உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி திமுக மகளிர் அணி ஆர்ப்பாட்டம்

December 21, 2020 தண்டோரா குழு

கேஸ் சிலிண்டர் விலை உயர்வை மத்திய அரசு திரும்ப பெற வலியுறுத்தி திமுக மகளிர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அனைத்து மக்களின் அத்தியாவசிய தேவையாக எரிபொருள்கள் உள்ள நிலையில் மத்திய அரசு சிலிண்டரின் விலையை உயர்த்தி உள்ளது. இதனால் சாமானிய மக்கள் பெரிதும் பாதிக்கபட்டு உள்ளனர்.மானியத்தை விட்டு தர கோரி மத்திய அரசு கேட்டு கொண்டதை அடுத்து சிலர் அதனை விட்டு கொடுத்த நிலையில் மற்றவர்களுக்கு மானிய தொகை வங்கிகளில் செலுத்தபட்டு வந்த நிலையில் அதனை மத்திய அரசு நிறுத்தியது.ஒரு சிலிண்டரின் விலை 600 ரூபாய்க்கும் அதிகமாக விற்பனை செய்யபட்ட நிலையில் ஒரு மாத காலத்திற்குள் மட்டும் 100 ரூபாயை மத்திய அரசு உயர்த்தி உள்ளது.இதனால் அனைத்து தரப்பு மக்களும் பாதிப்பிற்க்கு உள்ளாகியுள்ளனர்.

மத்திய அரசின் இந்த நடவடிக்கையை கண்டித்து கோவை மாவட்ட திமுக மகளிர் அணி சார்பில் தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திமுக சொத்து பாதுகாப்பு குழு துனை தலைவர் பொங்கலூர் பழனிசாமி வாழ்த்துரை வழங்கி துவக்கி வைத்தார்.இதன் பின்னர் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் சிலிண்டர் விலையை உடனடியாக மத்திய அரசு திரும்ப பெற வேணும் என வலியுறுத்தியவர்கள் மத்திய அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

மாநில மகளிர் தொண்டர் அணி துணை அமைப்பாளர் மீனா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில்
தலைமை கழக பேச்சாளர் ஈஸ்வரி ராதாகிருஷ்ணன்,கிழக்கு மாவட்ட செயலாளர்
சரஸ்வதி புஷ்பராஜ்,மேற்கு மாவட்ட செயலாளர் வானதி நாகராஜ் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். 300கும் மேற்பட்ட திமுக மகளிர் அணியினர் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

மேலும் படிக்க