• Download mobile app
11 May 2025, SundayEdition - 3378
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கேரள கல்லூரி மாணவர்களை மடக்கி பிடித்த கோவை போலீஸார்

May 6, 2023 தண்டோரா குழு

கோவையில் கேரளா மாநில வாளையார் எல்லைப்பகுதிக்கு மிகவும் அருகில் அமைந்துள்ள கே.ஜி.சாவடி பகுதியில் உயர்ரக போதை பொருள் விற்பனைக்கு வைத்திருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் தனிப்படை போலீஸார் நேற்று மாலை அப்பகுதியில் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது பாலக்காடு ரோடு கவுண்டர் மெஸ் அருகே சோதனை மேற்கொண்ட போது உயர் ரக போதை பொருளான மெத்தபெட்டமைனை வைத்திருந்த கேரளா மாநிலத்தை சேர்ந்த அபிநந்த் (21) மற்றும் முகமது பைசல் (19) ஆகியோர் போலீஸாரை கண்டதும் கேரளாவுக்கு தப்பிக்க முயன்றனர். தனிப்படை போலீஸார் அவர்களை எல்லைப்பகுதிக்கு முன்பாகவே மடக்கி பிடித்து கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூபாய் 16000 மதிப்புள்ள 6 கிராம் எடையுள்ள மெத்தபெட்டமைன் பறிமுதல் செய்யப்பட்டது.

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ”
இந்த இரண்டு இளம் வாலிபர்களும் கேரளா மாநிலத்தை சேர்ந்தவர்கள். கேரளாவில் இருந்து கோவைக்கு வந்த அவ்வப்போது போதை பொருள் விற்பனை செய்து வந்துள்ளனர். இவர்கள் இருவரும் பாலக்காடு அடுகே உள்ள கல்லூரியில் படித்து வருகின்றனர்,” என்றனர்.

மேலும் படிக்க