• Download mobile app
09 Sep 2025, TuesdayEdition - 3499
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கேரள கல்லூரி மாணவர்களை மடக்கி பிடித்த கோவை போலீஸார்

May 6, 2023 தண்டோரா குழு

கோவையில் கேரளா மாநில வாளையார் எல்லைப்பகுதிக்கு மிகவும் அருகில் அமைந்துள்ள கே.ஜி.சாவடி பகுதியில் உயர்ரக போதை பொருள் விற்பனைக்கு வைத்திருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் தனிப்படை போலீஸார் நேற்று மாலை அப்பகுதியில் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது பாலக்காடு ரோடு கவுண்டர் மெஸ் அருகே சோதனை மேற்கொண்ட போது உயர் ரக போதை பொருளான மெத்தபெட்டமைனை வைத்திருந்த கேரளா மாநிலத்தை சேர்ந்த அபிநந்த் (21) மற்றும் முகமது பைசல் (19) ஆகியோர் போலீஸாரை கண்டதும் கேரளாவுக்கு தப்பிக்க முயன்றனர். தனிப்படை போலீஸார் அவர்களை எல்லைப்பகுதிக்கு முன்பாகவே மடக்கி பிடித்து கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூபாய் 16000 மதிப்புள்ள 6 கிராம் எடையுள்ள மெத்தபெட்டமைன் பறிமுதல் செய்யப்பட்டது.

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ”
இந்த இரண்டு இளம் வாலிபர்களும் கேரளா மாநிலத்தை சேர்ந்தவர்கள். கேரளாவில் இருந்து கோவைக்கு வந்த அவ்வப்போது போதை பொருள் விற்பனை செய்து வந்துள்ளனர். இவர்கள் இருவரும் பாலக்காடு அடுகே உள்ள கல்லூரியில் படித்து வருகின்றனர்,” என்றனர்.

மேலும் படிக்க