• Download mobile app
04 Jul 2025, FridayEdition - 3432
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கேரள அரசியலை கற்க கல்விச் சுற்றுலாபோல் இங்கு வந்துள்ளேன்-கமல்

September 1, 2017 தண்டோரா குழு

அரசியலை கற்க ஒரு கல்விச் சுற்றுலா போல் கேரளாவிற்கு வந்துள்ளேன் என முதல்வர் பினராயி விஜயனை சந்தித்த பின் நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் சமீப காலமாக அரசியல் குறித்தும் தமிழக அரசு குறித்தும் பேட்டிகளிலும், பிக்பாஸ் நிகழ்ச்சியிலும், டிவிட்டரிலும் பேசி வருகிறார். இந்நிலையில், இன்று கேரள முதல்வர் பினராய் விஜயனுடன் நடிகர் கமல்ஹாசன் இன்று திடீரென சந்தித்து பேசியதோடு அவருடன் ஓணம் விருந்து சாப்பிட்டார்.

பின்னர் கமல் நிருபர்களிடம் பேசுகையில்,

கடந்த வருடம் ஓணத்தின்போதே முதல்வரை சந்திப்பதாக இருந்தது. சிறு விபத்தில் நான் அப்போது சிக்கிக்கொண்டதால் பங்கேற்க முடியவில்லை. எனவே இந்த வருட ஓணத்திற்கு வந்துள்ளேன். தமிழக அரசியலுக்கு கேரள அரசியலில் இருந்து ஏதாவது பாடத்தை கற்க முடியுமா என்ற ஆர்வத்தில் அரசியலை கற்க கல்விச்சுற்றுலா போலவும் இங்கு வந்துள்ளேன். இங்கு சிறப்பான ஆட்சி நடைபெற்று வருகிறது என கூறினார்.

பிரான்ஸ் அரசின் உயரிய ‘செவாலியே’ விருதை தமிழில் சிவாஜிக்குப் பிறகு கமல்ஹாசன் வாங்கியது. இதற்காக ஒட்டுமொத்த திரை உலகமும் அவரை கொண்டாடியது. அந்த வகையில் கேரள முதல்வர் பினராயி விஜயனும் அவரை வாழ்த்தியிருந்தார்.அப்போது தான் ஒரு மலையாளி என்றும், தனது முதல்வர் பினராயி விஜயன் என்றும் கமல் குறிப்பிட்டு நன்றி கடிதம் அனுப்பியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க