August 24, 2018
தண்டோரா குழு
கேரளாவுக்கு உதவ தயராக இருப்பதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அறிவித்துள்ளார்.
கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து கடந்தவாரம் 100 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கனமழை பெய்தது.
கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இதுவரை 324 பேருக்கு மேலாக உயிரிழந்துள்ளனர். பருவமழையினால் ஏற்பட்ட வெள்ளத்தின் காரணமாக அங்கு மொத்தமுள்ள 14 மாவட்டங்களில் 13 மாவட்டங்கள் கடுமையாக பாதித்தன. தற்போது வெள்ளம் வடிய துவங்கி விட்ட நிலையில் நிவாரண முகாம்களிலிருந்து மக்கள் வீடு திரும்பி வருகின்றனர். இதனால் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மக்களுக்காக முதலமைச்சரின் பொதுநிவாரண நிதிக்குபல்வேறு மாநில முதல்வர்கள் மற்றும் திரையுலகத்தை சேர்ந்தவர்கள் பலர் நிதியுதவி அளித்து வருகின்றனர்.
இந்நிலையில், கேரளாவுக்கு உதவ தயராக இருப்பதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில்,
வெள்ளத்தால் பேரழிவைச் சந்தித்துள்ள இந்தியாவின் கேரள மாநிலத்துக்காக பாகிஸ்தான் மக்களின் சார்பாக பிரார்த்திப்பதாகவும் மனிதாபிமான அடிப்படையில் கேரளாவுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்யத் தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
அவரது இந்தக் கருத்துக்கு பாகிஸ்தானில் இருந்தும், வளைகுடா நாடுகளில் இருந்தும் சமூக வலைதளங்களில் ஆதரவும், பாராட்டும் குவிந்து வருகிறது.