• Download mobile app
07 Feb 2026, SaturdayEdition - 3650
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கேரளாவில் பயணிகளுடன் இரண்டு துண்டான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் !

August 7, 2020 தண்டோரா குழு

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் விமான நிலையத்தில் ஏர் இந்தியா விமானம் தரையிறங்கியபோது விபத்துக்குள்ளானது.

துபாயிலிருந்து பயணிகளுடன் புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் (ஐ.எஸ். 1344), இன்று இரவு 7.45 மணியளவில் கேரளாவின் கோழிக்கோடு காரிப்பூர் விமான நிலையம் நோக்கி தரையிறங்கியது. அப்போது
எதிர்பாராத விதமாக ஓடுதளத்தில் இருந்து விமானத்தின் சக்கரம் விலகியதால் ஓடுபாதையை விட்டு விலகி விமானம் விபத்திற்குள்ளானது.இந்த விமானத்தில் 10 குழந்தைகள் உட்பட 185 பயணிகள் மற்றும் 6 விமான ஊழியர்கள் பயணம் செய்துள்ளனர். இந்த விபத்தில் விமானி உயிரிழந்து உள்ளதாகவும், துணை விமானி படுகாயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

மேலும் படிக்க