• Download mobile app
01 May 2025, ThursdayEdition - 3368
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கேரளாவில் தலித்துகள் உட்பட பிராமணரல்லாதவர்கள் 35 பேர் குருக்களாக நியமனம்

October 6, 2017 தண்டோரா குழு

கேரளாவில் தலித்துக்கள் உட்பட பிராமணரல்லாதவர்கள் 36 பேர் குருக்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

கேரளாவின் திருவிதாங்கூர் தேவஸ்வம், இந்து ஆலய மதகுரு பணிக்காக,தேர்வான 62 பேரின் பெயர்ப்பட்டியல் கடந்த வியாழன் அன்று வெளியிடப்பட்டது.இதில்,பிற்படுத்தப்பட்ட, தலித் சமூகத்தை சேர்ந்த 36பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அரசு பணிகளுக்கான இட ஒதுக்கீடு அடிப்படையில் கோவில் மதகுரு பணிகளுக்கான தேர்வு நடைபெறுவது இதுவே முதல் முறையாகும்.

இவர்கள் முறையான நேர்முகத் தேர்வுகள், பரீட்சைகளுக்கு பின் தேர்வு செய்யப்பட்டிருக்கின்றனர்.
தேர்வு செய்யப்பட்டவர்கள் திருவிதாங்கூர் தேவஸ்வத்தின் கீழ் இயங்கும் ஆலயங்களில் பணியமர்த்தப்படுவார்கள்.தலித்துக்கள் உட்பட பிராமணரல்லாதவர்கள் 36 பேர் குருக்களாக நியமிக்கப்பட்டுள்ளது சமூக மாற்றத்திற்கான செயல்பாடாக பார்க்கப்படுகிறது.
பிராமணர் மட்டுமே முக்கிய பொறுப்பில் இருக்க அனுமதிக்கப்படும் சபரிமலை கோவிலின் மதகுருக்கள் நியமிப்பதில் இந்த முடிவின் தாக்கம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மதகுருவாக விரும்புவரின் தகுதி சடங்குகள், மரபுகள் குறித்த அறிவை பொறுத்தது, அவருடைய சாதியை பொறுத்தது இல்லை, என உச்ச நீதிமன்றம் ஐந்து ஆண்டுகளுக்கு முன் தீர்ப்பு அளித்தது. இதன் விளைவே திருவிதாங்கூர் தேவஸ்வத்தின் இந்த நடவடிக்கை என்பது குறிபிடத்தக்கது.

மேலும் படிக்க