• Download mobile app
03 May 2025, SaturdayEdition - 3370
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கேரளாவில் பள்ளி மாணவிகளுக்கு இலவச நாப்கின் வழங்கும் புதிய திட்டம்

November 9, 2017 தண்டோரா குழு

கேரளாவில் பள்ளி மாணவிகளுக்கு இலவச நாப்கின் வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

கேரளா மாநிலத்தின் பள்ளி மாணவிகளுக்கு இலவச நாப்கின் வழங்கும் ‘ஷீ பேட்’ திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.இதில் 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவிகளுக்கு இலவச நாப்கின்கள் வழங்கப்படும்.

முதல் கட்ட நடவடிக்கையாக, பெண்கள் அபிவிருத்தி நிறுவனம், இந்த திட்டத்தை சுமார் 300 பள்ளிகளில் செயல்படுத்தும். அதன்பிறகு, வரும் ஆண்டுகளில் மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் செயல்படுத்தப்படவுள்ளது.

இலவச நாப்கின்களை விநியோகிப்பது மட்டுமே இந்த திட்டத்தின் நோக்கம் அல்ல. மாதவிடாய் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கமும் கொண்டது ‘ஷீ பேட்’ திட்டம். கேரளா மாநிலத்தின் 114 பஞ்சாயத்துகளிலுள்ள 300 பள்ளிகளில் இந்த திட்டம் இந்த ஆண்டில் செயல்படுத்தப்படும்.என்று கேரளா முதலமைச்சர் பினராய் விஜயன் தனது பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்

மேலும் படிக்க