• Download mobile app
23 Mar 2026, MondayEdition - 3694
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கேரளாவில் பள்ளி மாணவிகளுக்கு இலவச நாப்கின் வழங்கும் புதிய திட்டம்

November 9, 2017 தண்டோரா குழு

கேரளாவில் பள்ளி மாணவிகளுக்கு இலவச நாப்கின் வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

கேரளா மாநிலத்தின் பள்ளி மாணவிகளுக்கு இலவச நாப்கின் வழங்கும் ‘ஷீ பேட்’ திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.இதில் 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவிகளுக்கு இலவச நாப்கின்கள் வழங்கப்படும்.

முதல் கட்ட நடவடிக்கையாக, பெண்கள் அபிவிருத்தி நிறுவனம், இந்த திட்டத்தை சுமார் 300 பள்ளிகளில் செயல்படுத்தும். அதன்பிறகு, வரும் ஆண்டுகளில் மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் செயல்படுத்தப்படவுள்ளது.

இலவச நாப்கின்களை விநியோகிப்பது மட்டுமே இந்த திட்டத்தின் நோக்கம் அல்ல. மாதவிடாய் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கமும் கொண்டது ‘ஷீ பேட்’ திட்டம். கேரளா மாநிலத்தின் 114 பஞ்சாயத்துகளிலுள்ள 300 பள்ளிகளில் இந்த திட்டம் இந்த ஆண்டில் செயல்படுத்தப்படும்.என்று கேரளா முதலமைச்சர் பினராய் விஜயன் தனது பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்

மேலும் படிக்க