• Download mobile app
24 Apr 2024, WednesdayEdition - 2996
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கொரோனாவுக்கு தமிழகத்தில் முதல் பலி

March 24, 2020 தண்டோரா குழு

கொரோனா பாதிப்புடன் மதுரையில் சிகிச்சை பெற்று வந்த 54 வயது நபர் உயிரிழந்தார் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் டிவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்புடன் 18 பேர் சிகிச்சை பெற்று வந்தனர். இதில் மதுரையை சேர்ந்தவரும் ஒருவராவார். ஆபத்தான நிலையில் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இது கொரோனாவிற்கு தமிழகத்தில் முதல் பலியாகும்.

தங்களால் முடிந்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டோம்.நேற்று மாலையிலிருந்து அளிக்கப்படும் சிகிச்சைக்கு அவரது உடல்நிலை ஒத்துழைக்கவில்லை. சர்க்கரை நோய், உயர் இரத்த அழுத்தம் உள்ளிட்டவை இருந்த நிலையில் கொரோனா தொற்றும் ஏற்பட்டது என அமைச்சர் விஜயபாஸ்கர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இவர் வெளிநாடு, வெளிமாநில சென்று வராமல் கொரோனா பாதிப்புக்கு உள்ளானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க