விவசாய பட்டா நிலங்களில் கெயில் எரிவாயு குழாய் அமைக்க தமிழக அரசு அனுமதிக்காது என அமைச்சர்கள் உறுதியளித்துள்ளனர்.
விவசாயிகளின் பிரச்சினைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் கோவை பந்தய சாலை பகுதியில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் திங்கட்கிழமை நடைபெற்றது. அந்த ஆலோசனைக் கூட்டத்தில் கோவை, திருப்பூர், ஈரோடு, தர்மபுரி உள்ளிட்ட கெயில் எரிவாய்வு குழாய் திட்டத்தால் பாதிக்கப்படக் கூடிய ஏழு மாவட்டங்களையும் சேர்ந்த விவசாயிகள் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் தமிழக அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, எடப்பாடி பழனிச்சாமி, கருப்பண்ணன், தங்கமணி, அன்பழகன், ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு விவசாயிகளுடன் ஆலோசனை மேற்கொண்டனர்.
கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய விவசாயிகள், “மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்தது போல் விவசாய பட்டா நிலங்களில் கெயில் எரிவாய்வு குழாய் அமைக்க தமிழக அரசு அனுமதிக்காது என அமைச்சர்கள் உறுதியளித்துள்ளனர்.
இந்தப் பிரச்சினைக்கு முக்கிய காரணமாக உள்ள பெட்ரோலியம், மினரல் பைப் லைன் சட்டத்தையும் திரும்பப் பெற வலியுறுத்தி, கூட்டத்தில் அமைச்சர்களிடம் கோரிக்கை வைத்துள்ளோம். இந்தச் சட்டத்தைத் திரும்பப் பெற வைப்பதே விவசாயிகளின் முக்கிய குறிக்கோள் இதற்காக வரும்காலங்களில் கடுமையான போராட்டங்களில் ஈடுபடவுள்ளோம்” என்று தெரிவித்தனர்.
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு
ஷாலினி வாரியரை புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமித்தது கோஸ்ரீ ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம்
இந்தியாவிலேயே முதன் முறையாக உக்கடம் பகுதியில் சிங்க முகங்களுடன் வெண்கல அசோக தூண் திறப்பு
கோவை வடக்கு மாவட்ட கரும்புக்கடை பகுதி திமுக சார்பில் 4ம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்
கோவையில் ஜெஎஸ்டபுள்யூ எம்.ஜி மோட்டார்ஸ் வின்ட்சர் புரோ என்ற பேட்டரி காரை அறிமுகம் செய்தது