September 28, 2021
தண்டோரா குழு
கோவை உக்கடம் பெரிய குளத்தில் கடந்த 15 நாட்களுக்கு முன் செந்நாய் நடமாட்டம் இருப்பது தெரியவந்தது.
காட்டில் இருந்து வழிதவறி வந்த செந்நாயை வனத்துறையினர் மீண்டும் வனத்திற்கு விரட்டி அடித்தனர். இந்நிலையில், இன்று காலை பேரூர் சாலையில் உள்ள கெம்பட்டி காலனியில் செந்நாய் வந்து 3 நபரை கடித்து காயப்படுத்தியதாக தகவல்கள் பரவியது.
இதையடுத்து, வனத்துறையினர் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். இதில், மூன்றுக்கும் மேற்பட்ட நபர்களை கடித்தது, நாட்டு நாய் என மாநகராட்சி கால்நடை மருத்துவர் உறுதி செய்தார்.
இதையடுத்து மாநகராட்சி ஊழியர்கள் நாட்டு நாயை பிடித்து சென்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.