• Download mobile app
14 Jul 2026, TuesdayEdition - 3807
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

“கூடுதல் தண்ணீர் தர மறுக்கப்படுகிறது” – ரயில் பயணிகள் புகார்

March 23, 2017 தண்டோரா குழு

டுராண்டோ எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்கு கூடுதலாக தண்ணீர் பாட்டில் தர மறுக்கப்படுகிறது என்று பயணிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

யஷ்வந்த்பூர் ரயில் நிலையத்திலிருந்து ஹௌரா ரயில் நிலையத்திற்கு டூராண்டோ எக்ஸ்பிரஸ் ரயில் செலுத்தப்படுகிறது. இந்த வழித்தடத்தின் பயணம் சுமார் 2௦ மணி நேரம் ஆகும்.

ஒரு நாளைக்கு 8 டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். ஆனால், இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா நிறுவனம்(IRCTC) இந்த அறிவுரையை பின்பற்ற மறுக்கிறது என பயணிகள் தெரிவித்தனர்.

டுராண்டோ ரயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்கு தலா ஒரு தண்ணீர் பாட்டில் தரப்படுகிறது. பயணிகளின் பயணம் நன்றாக இருக்க இந்திய ரயில்வே அமைச்சகம் பல உறுதிமொழிகள் தந்திருந்தும், பயணிகளின் தேவையறிந்து அதை செயல்படுத்த முடியவில்லை. இதனால் பயணிகள் ரயில்வே அதிகாரிகளுக்கு புகார்கள் அளித்த வண்ணம் உள்ளனர்.

இது குறித்து பயணி ஒருவர் கூறுகையில்,

“மார்ச் 2௦-ம் தேதி என் குடும்பத்தினருடன் நான் ஹௌராவிலிருந்து நாக்பூர் செல்ல டுராண்டோ ரயிலில் பயணம் செய்தேன். ரயில் புறப்பட்டபோது ஒவ்வொருவருக்கும் ஒரு தண்ணீர் பாட்டில் தரப்பட்டது. இரவு 1௦ மணியளவில் கூடுதல் தண்ணீர் பாட்டில் வேண்டும் என்று கேட்டேன். 2௦மணி நேர பயணத்திற்கு ஒரு பாட்டில் தண்ணீர் மட்டுமே வழங்கப்படும் என்று கேட்டரிங் ஊழியர்கள் தெரிவித்தனர். மேலும் இது குறித்து அவர்களுக்கு அனுப்பப்பட்ட சுற்றறிக்கையை என்னிடம் காட்டினர்” என்றார்.

மற்றொரு பயணி கூறுகையில்,

“பெங்களூருவிலிருந்து கொல்கத்தா செல்ல டுராண்டோ ரயிலில் பயணம் செய்தேன். ரயில் பெட்டியிலுள்ள இருக்கை மோசமான நிலையில் உள்ளதையும், கழிவறையின் நிலையை கண்டும் வருத்தம் அடைந்தேன். ரயிலின் சேவையை மேம்படுத்த அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளேன்.” என்றார்.

இது குறித்து ரயில்வே அதிகாரிகள் பயணிகளிடம் கருத்து தெரிவிக்கக மறுத்துவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க