• Download mobile app
20 Jun 2026, SaturdayEdition - 3783
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

குழந்தையை கடத்த வந்தவர் என நினைத்து மனநோயாளி அடித்துக் கொலை

May 11, 2018 தண்டோரா குழு

திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கம் அருகே குழந்தை கடத்த வந்தவர் என எண்ணி மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞரை பொதுமக்கள் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.

கடந்த சில தினங்களாகவே குழந்தை கடத்தும் கும்பல் ஊடுருவதாக வாட்ஸ் அப் மற்றும் சமூகவலைதளங்களில் தவறான தகவல்கள் பரவி வருகிறது.இதனால் அச்சம் அடைந்த பொதுமக்கள் சந்தேகம்படும்படி யார் வந்தாலும் அவர்கள் மீது தாக்குதலை நடத்துகின்றனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு பகுதியில் 30 வயது மதிக்கத்தக்க மனநோயாளி ஒருவர் கையில் அழுக்குத் துணி மூட்டையுடன் சுற்றித் திரிந்து வந்துள்ளார்.அவரை அப்பகுதிமக்கள் குழந்தை கடத்த வந்தவர் என எண்ணி சராமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளனர்.இந்த தாக்குதலில் மனநோயாளி சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார். ன்னர் அவர் சடலத்தை பொதுமக்கள் உப்பு நீர் ஏரியில் உள்ள மேம்பாலத்தில் கயிற்றை கட்டி தொங்க விட்டுள்ளனர்.

இதையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் சடலத்தை மீட்டனர். ன்னர் விசாரணையில் அவர் ஒரு மனநோயாளி எனவும் வெகு நாட்களாக திருவள்ளூர் பகுதியில் சுற்றி திரிந்ததும் அவர் குழந்தை கடத்தும் நபர் இல்லை என்றும் விசாரணையில் தெரியவந்தது.

மேலும் படிக்க