• Download mobile app
08 Sep 2026, TuesdayEdition - 3863
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

குளிர்பானம் என்று நினைத்து அசிட் குடித்த இரண்டு சிறுவர்கள் பலி

September 30, 2017 தண்டோரா குழு

பெங்களூரில் நடந்த பிறந்தநாள் விழாவில், குளிர்பானம் என்று நினைத்து அசிட் (sulphuric acid) குடித்த இரண்டு சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சாஹில் ஷங்கர் என்னும் 9 வயது சிறுவன், 3-ம் வகுப்பு படித்து வருகிறான். அவன் புதன்கிழமை(செப்டம்பர் 27),தனது பிறந்தநாள் விழாவிற்கு தனது நண்பர்கள் மற்றும் உறவினர்களை அழைத்து உள்ளான். இதனிடையே பிறந்த நாள் விழாவில் அவனது நண்பர்கள் இருவரும் குளிர்பானம் என்று நினைத்து அசிட் குடித்துள்ளனர். அதை குடித்த சிறுவர்கள் அங்கேயே மயங்கி விழுந்தனர்.
இதையடுத்து அந்த இரண்டு சிறுவர்களையும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள், இருவரும் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதை அறிந்த காவல்துறையினர், அந்த சிறுவர்களின் பெற்றோரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க