• Download mobile app
03 Jul 2025, ThursdayEdition - 3431
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

குளிர்பானம் என்று நினைத்து அசிட் குடித்த இரண்டு சிறுவர்கள் பலி

September 30, 2017 தண்டோரா குழு

பெங்களூரில் நடந்த பிறந்தநாள் விழாவில், குளிர்பானம் என்று நினைத்து அசிட் (sulphuric acid) குடித்த இரண்டு சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சாஹில் ஷங்கர் என்னும் 9 வயது சிறுவன், 3-ம் வகுப்பு படித்து வருகிறான். அவன் புதன்கிழமை(செப்டம்பர் 27),தனது பிறந்தநாள் விழாவிற்கு தனது நண்பர்கள் மற்றும் உறவினர்களை அழைத்து உள்ளான். இதனிடையே பிறந்த நாள் விழாவில் அவனது நண்பர்கள் இருவரும் குளிர்பானம் என்று நினைத்து அசிட் குடித்துள்ளனர். அதை குடித்த சிறுவர்கள் அங்கேயே மயங்கி விழுந்தனர்.
இதையடுத்து அந்த இரண்டு சிறுவர்களையும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள், இருவரும் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதை அறிந்த காவல்துறையினர், அந்த சிறுவர்களின் பெற்றோரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க