• Download mobile app
01 Sep 2025, MondayEdition - 3491
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

குறை பிரசவ குழந்தைகளை காக்க வரும் ‘பயோ பேக்’

April 29, 2017 தண்டோரா குழு

குறை பிரசவத்தில் பிறக்கும் குழந்தைகளின் உயிரை காக்க பயோ பேக் என்னும் புதிய கருவி ஒன்று அமெரிக்காவில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

குறை பிரசவ சிக்கல்களால் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1 மில்லியன் குழந்தைகள் பிறந்து இறக்கின்றனர் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இதை தடுக்க அமெரிக்க நாட்டின் பிலடெல்பியா குழந்தைகள் மருத்துவமனை மருத்துவர்கள் ஒரு புதிய கருவியை வடிவமைத்துள்ளனர். இந்த கருவிக்கு “பயோ பேக்” என்று பெயர் வைத்துள்ளனர்.

தண்ணீர் நிறைந்த தலையணைபோல அந்த கருவி வடிவமைக்கப்பட்டுள்ளது. அதில் தாயின் கருவிலிருக்கும் பனிக்குட நீரை ஆய்வுக் கூடத்தில் தயாரித்து அந்த தலையணையில் நிரப்பியுள்ளனர். குழந்தையின் ரத்த ஓட்டம் மற்றும் காற்று பரிமாற்றத்தை தொப்புள்கொடி மூலம் செலுத்த, விசேஷ குழாய்கள் வெளியே இருக்கும் கருவியுடன் இணைக்கப்பட்டுள்ளது.

குறை பிரசவத்தில் பிறந்த ஒரு செம்மறியாட்டு குட்டியை அந்த கருவியில் வைத்து மருத்துவர்கள் பரிசோதனை செய்தனர். நான்கு வாரங்களில் ஆட்டுக்குட்டியின் மூளை மற்றும் நுரையீரல் திறமையாக உருவாகி இருப்பதை மருத்துவர்கள் கண்டுள்ளனர்.

இதன் மூலம் குறை பிரசவத்தில் பிறக்கும் குழந்தைகளை இந்த இயந்திரத்தில் வைத்து எதிர்காலத்தில் பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க