• Download mobile app
13 Aug 2025, WednesdayEdition - 3472
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

குறு, சிறு தொழில்களுக்கான தனி திட்டங்களை ஒன்றிய அரசு அறிவிக்க வேண்டும் – குறுந்தொழில் முனைவோர்கள் கோரிக்கை

December 28, 2021 தண்டோரா குழு

தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந்தொழில் முனைவோர்கள் (டாக்ட்) சங்கத்தின் நிர்வாகிகள் கூட்டம் சங்க அலுவலகத்தில் கோவை மாவட்ட தலைவர் ஜேம்ஸ் தலைமையில் நடைபெற்றது. இதில் பொதுச்செயலாளர் பிரதாப்சேகர், பொருளாளர் லீலா கிருஷ்ணன் முன்னிலை வகித்தார்கள்.

இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து கேம்ஸ் கூறியிருப்பதாவது:

ஒன்றிய அரசு குறுந்தொழில்கள் பிரச்சனைகளை கண்டறிய குறுந்தொழில் சார்ந்த அமைப்புகளுடன் கலந்துரையாடி குறுந்தொழிலை பாதுகாப்பதற்கான திட்டங்களை அறிவிக்க வேண்டும். ஜாப் ஆர்டர்கள் செய்கின்ற தொழில் முனைவோர்களுக்கு ஜி.எஸ்.டி.யை 5 சதவீதமாக குறைத்து வரும் பட்ஜெட் கூட்டத் தொடரில் அறிவிக்க வேண்டும்.

இந்தியாவில் கடந்த காலங்களில் குறு, சிறு தொழில்களுக்கு என 1400க்கும் மேற்பட்ட உற்பத்தி சார்ந்த பொருள்கள் இருந்து வந்தன. அந்த கால கட்டத்தில் குறு, சிறு தொழில் வளர்ச்சி பெரும் முன்னேற்றம் கண்டு வந்தது. மேற்கண்ட உற்பத்தியில் பெரும் தொழில் நிறுவனங்களும், கார்ப்புரேட் நிறுவனங்களும் ஈடுபடுவதற்கு தடை இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் காட் என்கிற ஒப்பந்தத்தில் நம் நாடு கையெழுத்து செய்தது. அதன் பிறகு குறு, சிறு தொழில் சார்ந்த உற்பத்தி துறையில் பெரும் நிறுவனங்களும், கார்ப்புரேட் நிறுவனங்களும் ஈடுபடத் தொடங்கியது. இதில் இருந்து குறு, சிறு தொழில்களின் வளர்ச்சி என்பது குறைய தொடங்கியது. ஒன்றிய அரசு இதனை சீர் செய்ய குறு, சிறு தொழில்களுக்கான தனி திட்டங்களை அறிவிக்க வேண்டும்.

தமிழக அரசு குறுந் தொழில்களை பாதுகாக்க 25 ஹச்.பி.க்கு கீழ் பயன்படுத்தும் மின்சாரத்துக்கு மானிய விலையில் மின்சாரம் வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும். கோவையில் குறுந்தொழில் முனைவர்களுக்காக தொழில்பேட்டை அமைக்க வேண்டும். இவ்வாறு ஜேம்ஸ் கூறினார்.

இக்கூட்டத்தின் நிறைவாக மாவட்ட துணைத்தலைவர் பாரத்ரவி நன்றி கூறினார்.

மேலும் படிக்க