March 14, 2018
தண்டோரா குழு
தேனி குரங்கணி காட்டுத்தீ – மலையேற்றம் சென்றவர்கள் உயிரிழப்பு குறித்து விசாரிக்கும் அதிகாரியாக அதுல்யா மிஸ்ரா IAS-யை தமிழக அரசு நியமித்துள்ளது.
குரங்கணி தீவிபத்து தொடர்பாக விசாரணை நடத்தும் அதிகாரியாக வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மை முதன்மை செயலர் அதுல்ய மிஸ்ரா நியமிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில்,
குரங்கணி தீவிபத்து தொடர்பாக 2 மாதத்தில் விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க அதுல்ய மிஸ்ராவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இது போன்ற சம்பவங்கள் எதிர்காலங்களில் நடக்காமல் இருக்க தேவையான பரிந்துரைகள் அளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.