கோவை ஆலாந்துறை மூலப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் குமரேசன் (29) டிரைவர். இவரது மனைவி சங்கீதா 25. இவர்களுக்கு ஒரு வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் குமரனுக்கு குடிப்பழக்கம் உள்ளது. அதனால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு சம்பவத்தன்று மீண்டும் தகராறு ஏற்பட்டது இதனால் சங்கீதா கோபித்துக்கொண்டு தனது குழந்தையை அழைத்துக்கொண்டு வடிவேலம்பாளையம் அதில் உள்ள தாய் வீட்டுக்கு சென்றார்.
சம்பவத்தன்று மனைவி வீட்டுக்கு சென்ற குமரேசன் அவரை தன்னுடன் வந்து விடுமாறு கூறினார். அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது இதை கண்ட சங்கீதாவின் உறவினர்கள் கருப்புசாமி 35 அவரது தம்பி அஜித் 32 ஆகியோர் அங்கு வந்து குமரேசனை சமாதானப்படுத்த முயற்சி செய்தனர். அப்போது அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த குமரேசன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து கருப்புசாமி மற்றும் அஜித்தை சரமாரியாக குத்தி அங்கிருந்து தப்பிச் சென்றார் பலத்த காயமடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.
பின்னர் இதுகுறித்து கருப்பசாமி ஆலந்துறை போலீசில் புகார் தெரிவித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து குமரேசன் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கோவை ஆனமலைஸ் டொயோட்டோவில் வாடிக்கையாளர்களுக்கு அர்பன் குரூஸர் ஹைரைடர் விழிப்புணர்வு அமர்வு
கோவை புரோசோன் மாலில் கிரிக்கெட் ரசிகர்களை சந்தித்த லைகா கோவை கிங்ஸ் அணியினர்
ரெனாட்டஸ் புரோக்கான் நிறுவனம் அதன் புது தயாரிப்பை அறிமுகம் செய்தது
1.36 கோடி மரங்கள் நட்டு காவேரி கூக்குரல் இயக்கம் சாதனை -நடப்பாண்டில் தமிழ்நாட்டில் 1.21 கோடி மரங்கள் நட இலக்கு
கிரசர், குவாரிகள் சங்கத்தின் சார்பில் 5000 மரக்கன்றுகள் நடவு
கோவை குமரகுரு கல்லூரி மாணவர்கள் உலகளாவிய சாதனை: மாற்று எரிசக்தி படகு, ரோபோடிக்ஸ் உருவாக்கம் – செய்தி பட