• Download mobile app
07 May 2024, TuesdayEdition - 3009
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

குடியரசு தினத்தை முன்னிட்டு கோவையில் தனியார் பள்ளியில் பிளாஸ்டிக் ஒழிப்பு பேரணி

January 26, 2019 தண்டோரா குழு

நாட்டின் 70 வது குடியரசு தினத்தை முன்னிட்டு கோவையில் உள்ள தனியார் பள்ளியில் பிளாஸ்டிக் ஒழிப்பு பேரணி மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

நாட்டின் 70 வது குடியரசு தினவிழாவை முன்னிட்டு கோவை சரவணம்பட்டியில் உள்ள விமல் ஜோதி பள்ளியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த நிகழ்வை பள்ளியின் தலைமையாசிரியர் கொடியசைத்து துவக்கி வைத்தார். பள்ளி மாணவ மாணவிகள் சுமார் 200க்கும் மேற்பட்டோர் இப்பேரணியில் கலந்து கொண்டனர். பிளாஸ்டிக்கை ஒழிப்போம் பிளாஸ்டிக் இல்லாத தமிழகத்தை உருவாக்குவோம் என்று பதாகைகள் ஏந்தி மாணவ மாணவிகள் ஊர்வலமாக சென்றனர்.

இந்த நிகழ்வைத் தொடர்ந்து பள்ளி மைதானத்தில் மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் மற்றும் மைம் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மைம் நிகழ்ச்சி மூலம் பிளாஸ்டிக்கினால் ஏற்படும் தீய விளைவுகள் குறித்து சிறு நாடகமாக மாணவர்கள் நடத்தினர். இந்நாடகம் பார்ப்போரை பரவசப்படுத்தியது, இந்த நிகழ்ச்சியில் ஏராளமான மாணவர்கள் மாணவிகள் பெற்றோர்கள் ஆசிரியர் என திரளானோர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க