• Download mobile app
21 Jul 2026, TuesdayEdition - 3814
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

குடியரசுத் தலைவர் மாளிகையில் தீ

February 3, 2017 தண்டோரா குழு

புதுதில்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் உள்ள கணக்காளர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை காலையில் திடீரென தீப்பற்றியது. ஆனால், அது உடனடியாக அணைக்கப்பட்டது.

இது குறித்து புதுதில்லி தீயணைப்புத் துறை அதிகாரி செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:

“புதுதில்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் உள்ள கணக்காளர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை காலையில் திடீரென தீப்பற்றியது.

இச்சம்பவம் குறித்து காலை 8.45 மணியளவில் எங்களுக்குத் தகவல் கிடைத்தது. ஆறு தீயணைப்பு வண்டிகள் சம்பவ இடத்திற்கு அனுப்பட்டன. அவர்கள் அங்கு விரைந்து பத்து நிமிடங்களில் தீயை அணைத்தனர். இச்சம்பவத்தில் அறையில் இருந்த பொருள்கள் சேதமடைந்துள்ளன. அதிர்ஷ்டவசமாக, உயிர்ச் சேதம் எதுவும் இல்லை. குறுகிய மின்னழுத்ததால் இந்தச் சம்பவம் நடந்தது என்று சந்தேகிக்கிறோம். இருப்பினும், இது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளோம்.

நடப்பாண்டின் பட்ஜெட் கூட்டத்தொடர் முன் நாடாளுமன்றத்தில் உள்ள கணினி அறையில் தீ பற்றியதால் அங்கிருந்தவர்கள் பீதிக்கு ஆளாயினர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க