• Download mobile app
18 Sep 2025, ThursdayEdition - 3508
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

குடிப்பதை நிறுத்தச்சொன்ன மனைவியை தாக்கிய கணவர் கைது

October 17, 2020 தண்டோரா குழு

குடிப்பதை நிறுத்தச்சொன்ன மனைவியை பூரி கட்டையால் தாக்கிய கணவரை போலீசார் கைது செய்தனர்.

கோவை கரும்புக்கடை திப்பு நகரைச் சேர்ந்தவர் காஜா உசேன் பூ வியாபாரம் செய்து வருகிறார். காஜா உசேனுக்கு குடிப்பழக்கம் இருந்தது. இதனால் தினமும் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்துள்ளார்.இதனை அவரது மனைவி தட்டிக் கேட்டார்.இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி வாக்கு வாதம் ஏற்பட்டு வந்தது.

இந்த நிலையில் நேற்று இரவு காஜா உசேன் குடிபோதையில் வீட்டுக்கு வந்தார். இதனை மனைவி கடுமையாக கண்டித்தார்.இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது இதில் ஆத்திரமடைந்த கணவர் அங்கிருந்து பூரி கட்டையை எடுத்து மனைவியின் நெற்றியில் ஓங்கி அடித்தார்.இதில் அவரது நெற்றி பிளந்து ரத்தம் கொட்டியது வலி தாங்க முடியாமல் மனைவி அலறி சத்தம் போட்டால் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து பார்த்தபோது ரத்தமாக தலை முழுவதும் ரத்தமாக இருந்தது அவரை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுகுறித்து மனைவி குனியமுத்தூர் போலீசில் புகார் செய்தார் போலீசார் வழக்குப்பதிவு செய்து காஜா உசேன் கைது செய்தனர்.

மேலும் படிக்க