• Download mobile app
24 May 2025, SaturdayEdition - 3391
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

குடிபோதையில் காதலியை இழிவாக பேசிய தகராறில் நண்பனை கொலை செய்த இளைஞர் கைது

May 8, 2020 தண்டோரா குழு

கோவையில் குடிபோதையில் காதலியை பற்றி இழிவாக பேசியதால் ஏற்பட்ட தகராறில், இளைஞரை கொலை செய்த அவரது நண்பர் கைது செய்யப்பட்டார்.

தேனியை சேர்ந்த சிவக்குமார் என்பவர், கோவை கணபதி அருகேயுள்ள கே.ஆர்.ஜி. நகரில் வீடு வாடகைக்கு தங்கியுள்ளார். 20 வயதான இவர், மெக்கானிக்காக பணியாற்றி வந்தார். இவருடன் திருப்பூர் மாவட்டம் புகலூர் அருகேயுள்ள பாலத்துறையை சேர்ந்த மணிகண்டன் (23) என்ற கார் மெக்கானிக் தங்கியிருந்தார். சிவக்குமார் காதலித்த பெண்ணுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்ததால் மன வேதனையுடன் இருந்துள்ளார்.

இந்நிலையில் நேற்றிரவு சிவக்குமாரும், மணிகண்டனும் சேர்ந்து மது அருந்தியுள்ளனர். அப்போது சிவக்குமாரின் காதலி குறித்து மணிகண்டன் இழிவாக பேசியதாக கூறப்படுகிறது.இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.அப்போது சிவகுமார் மணிகண்டனிடம் தூங்கும் போது கொலை செய்துவிடுவதாக கூறியுள்ளார்.இதைத் தொடர்ந்து இருவரும் தூங்க சென்று விட்டனர்.
இதனிடையே சிவக்குமார் தன்னைக் கொலை செய்து விடுவார் என்ற பயத்தில், வீட்டில் இருந்த உடற்பயிற்சி செய்யும் எடை கல்லை எடுத்து தூங்கிக்கொண்டிருந்த சிவக்குமாரின் தலையில் தாக்கினார். இதில் பலத்த காயமடைந்த சிவகுமார் பரிதாபமாக உயிரிழந்தார்.

பின்னர் மணிகண்டன் அங்கிருந்து தப்பிச் சென்றார்.இதுகுறித்து பக்கத்து வீட்டார் அளித்த தகவலின் பேரில் வந்த சரவணம்பட்டி காவல் துறையினர்,சிவகுமாரின் உடலை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்விற்காக அனுப்பி வைத்தனர்.இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மணிகண்டனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க