• Download mobile app
03 May 2026, SundayEdition - 3735
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

குஜராத்தில் ரமலான் நோன்பு ‘தொற்று நோய்’ என்று அச்சிடப்பட்டதால் சர்ச்சை

July 12, 2017 தண்டோரா குழு

குஜராத்தில் ரமலான் நோன்பு ‘தொற்று நோய்’ என்று பாடப்புத்தகத்தில் அச்சிடப்பட்டிருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலத்தில் நான்கம் வகுப்பு இந்தி பாடப்புத்தகத்தில் எழுத்தாளர் பிரேம்சந்த்தின் ‘இக்தா’ எனும் சிறுகதை உள்ளது.அதில் ரமலான் மாதத்தில் இஸ்லாமியர்கள் பின்பற்றும் நோன்பு வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தியை ஏற்படுத்தும் தொற்றுநோய் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இது குறித்து குஜராத் மாநில பள்ளி பாடநூல் வாரியம் அதிகாரி நிதின் பெத்தானி கூறுகையில்,

“காலரா நோயை, இந்தியில் ‘ஹைசா’ என்று அழைப்பர். ‘ஹைசா’ என்பதற்கு பதிலாக ‘ரஜா’ என்று தவறாக அச்சிடப்பட்டுள்ளது” என்று கூறினார்.

“இது போன்ற தவறை செய்பவர்களின் பெயரை வெளிப்படையாக அறிவித்து, அவர்களுக்கு தகுந்த தண்டனை வழங்க வேண்டும்” என்று குஜராத் கல்வி அமைச்சர் புபேந்தர சிங் தெரிவித்துள்ளார்.

மேலும் இஸ்லாமியர்களின் புனித நோன்பு குறித்து தவறான கருத்தை வெளியிட்ட அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இதற்கு முன் இயேசு பிரானை இதுபோல் ஒரு தவறான வார்த்தையால் அவமதிப்பு செய்தனர். இந்த தவறு நடந்து சில தினங்களுக்குள், மீண்டும் அச்சு பிழையால் சர்ச்சை உருவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க