• Download mobile app
06 Sep 2025, SaturdayEdition - 3496
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கீழடியில் அருங்காட்சியகம் அமைக்க உயர்நீதிமன்றம் உத்தரவு !

June 23, 2017 தண்டோரா குழு

கீழடியில் அருங்காட்சியகம் அமைக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டம் கீழடியில் தமிழரின் கலாச்சார அடையாளங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இங்கு கண்டுபிடிக்கப்பட்ட பொருட்கள் பெங்களூரு அருங்காட்சியாகத்திற்கு மாற்ற முடிவு செய்யப்பட்டது. இதனையடுத்து சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் கனிமொழி என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார்.

இதுதொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது,கீழடியில் அருங்காட்சியகம் அமைப்பதற்காக 2 ஏக்கர் நிலம் அரசு சார்பில் ஒதுக்கப்பட்டதாகவும் தொல்லியல் துறையும் கீழடியில் அருங்காட்சியகம் அமைக்க ஒப்புக் கொண்டுள்ளதாகவும் நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து அரசு வழங்கிய நிலத்தில் அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என இந்திய தொல்லியல் துறைக்கு நீதிபதிகள் செல்வம், ஆதிநாதன் அதிரடி உத்தரவு பிறப்பித்தனர்.பின்னர் வழக்கு விசாரணையை ஜூலை 24-ம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.

மேலும் படிக்க