• Download mobile app
06 Jun 2026, SaturdayEdition - 3769
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கிலோ மீட்டருக்கு 10 பைசா செலவில் பயணம் செய்யும் மின்சார வாகனம் அறிமுகம்

November 9, 2020 தண்டோரா குழு

கிலோ மீட்டருக்கு ரூ.10 பைசா செலவில் பயணம் செய்யும் வகையில் மின்சார இரு சக்கர வாகனங்களை திருப்பூரை சேர்ந்த நிறுவனம் கோவையில் அறிமுகம் செய்துள்ளது.

திருப்பூரை சேர்ந்த சி.கே.மோட்டார்ஸ் சார்பாக பேட்டரியில் இயங்க கூடிய மின்சார வாகன அறிமுக நிகழ்ச்சி கோவை சரவணம்பட்டி பகுதியில் நடைபெற்றது. அப்போது சி.கே மோட்டார்ஸ்-ன் வணிக தலைவர் குணசேகரன் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது பேசிய அவர்,

சரவதேச பிரச்சனையான சுற்றுச்சூழல் மாசுபாடுவதை கருத்தில் கொண்டு எங்கள் நிறுவனம் லித்தியம் பேட்டரியால் இயங்கும் ஸ்கூட்டர்கள், மொபட்டுகள் மற்றும் சைக்கிள்களை தயாரித்துள்ளது. இதுவரை சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்ட அனைத்து மின்சார வாகனங்களையும் தீவிரமாக ஆராய்ந்து அதில் காணப்படும் அனைத்து தொழில்நுட்ப மற்றும் இயக்கத்தில் உள்ள இன்னல்களை தவிர்த்து இந்த வாகனங்களை தயாரித்துள்ளோம்.ஒருமுறை சார்ஜ் செய்தால் 120 கிலோ மீட்டார் வரை செல்லும் வாகனம், 80 கிலோ மீட்டர் மற்றும் 60 கிலோ மீட்டர் தொலைவுக்கு செல்லும் வாகனங்களை தயாரித்துள்ளோம். இந்த மின்சார வாகனங்கள் மூலம் கிலோ மீட்டருக்கு ரூ.10 பைசாவுக்கும் குறைவான செலவில் பயணம் செய்ய முடியும் என அவர் தெரிவித்தார்.

மேலும் படிக்க