• Download mobile app
04 May 2025, SundayEdition - 3371
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கிறிஸ்தவ, முஸ்லிம் மகளிர் உதவும் சங்க உறுப்பினர்களாக விண்ணப்பிக்கலாம் ஆட்சியர் தகவல்

November 3, 2021 தண்டோரா குழு

கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் கூறியிருப்பதாவது:

கோவை மாவட்டத்தில் கடந்த 2010-ம் ஆண்டு முதல் முஸ்லிம் மகளிர் சங்கம் செயல்பட்டு வருகிறது. இதேபோல் கடந்த 2019-ம் ஆண்டு முதல் கிறிஸ்தவ மகளிர் உதவும் சங்கம் செயல்பட்டு வருகிறது. இந்த சங்கங்கள் மூலம் அந்தந்த மதங்களை சேர்ந்த ஆதரவற்ற, ஏழ்மை நிலையில் உள்ள பெண்கள், ஆதரவற்ற விதவைகள் சிறுதொழில் செய்திட தேவையான உதவிகள் செய்யப்படுகின்றன.

மேலும் பொருளாதாரத்தில் பின்தங்கி உள்ள பெண்களுக்கு அவர்களின் கல்வி மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்கு தேவையான உதவிகள் அந்தந்த சங்கங்கள் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த சங்கங்கள் மேலும் சிறப்பாக செயல்படும் விதமாக அந்தந்த மதங்களை சேர்ந்த சங்கங்களுக்கு புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கப்பட உள்ளது. கோவை மாவட்டத்தில் வசிக்கும் கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம் மதங்களை சேர்ந்த சமூக பணிகளில் ஆர்வமாக உள்ள தகுதியான நபர்கள், அவர்களின் மதம் சார்ந்த சங்கங்களின் உறுப்பினராக விண்ணப்பிக்கலாம்.

எனவே விருப்பம் உள்ளவர்கள் கோவை ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகத்தில் தங்களது விண்ணப்பங்களை வரும் 25-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் படிக்க