• Download mobile app
12 Jun 2025, ThursdayEdition - 3410
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு

கிரீன்கோ குரூப், 1,000 மருத்துவ ஆக்சிஜன் செறிவூட்டிகளை விமானம் மூலம் கொண்டு வந்தது

May 17, 2021 தண்டோரா குழு

ஹைதராபாத்தை மையமாகக் கொண்டு இயங்கி வரும் இந்தியாவின் மாபெரும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் நிறுவனமான கிரீன்கோ குரூப், ஆரம்ப கட்டத்திலேயே உள்நாட்டில் ஆபத்துக்கால ஆக்சிஜனை வழங்கும் நோக்கத்தோடு சிறப்பான முயற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில், உலகளாவிய விநியோகச் சங்கிலி நெட்வொர்க்கிலிருந்து ஆபத்துக்கால ஆக்சிஜன் செயல்பாட்டு அமைப்புகளை இந்தியாவுக்குக் கொண்டு வரும் பணிகளை மேற்கொண்டு வருகிறது. கொரோனா இரண்டாவது அலைக்கு எதிராக கடுமையாகப் போராடி வரும் நிலையில், இந்தியாவுக்கு உதவும் பொருட்டு நிமிடத்திற்கு 10 லிட்டர்கள் திறன் கொண்ட 200 மிகப்பெரிய மருத்துவ தரமுள்ள ஆக்சிஜன் செறிவூட்டிகளைக் கொண்டுவரும் ஐந்து சரக்கு விமானங்களில் முதலாவது விமானம் ஹைதராபாத்தில் தரையிறங்கியது.

தெலங்கானா மாநில அரசின் சார்பாக, அம்மாநில நகராட்சி நிர்வாகம் மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை, தொழில் துறை, தகவல் தொழில்நுட்பம், மின்னணு மற்றும் தொலைத்தொடர்பு துறை அமைச்சர் கே. டி. ராமாராவ் மற்றும் தலைமைச் செயலாளர் சோமேஷ் குமார் ஆகியோர் மாநில அரசின் சார்பில் இந்த விமானத்தை வரவேற்றனர். இந்த முதலாவது சரக்கு விமானம் வந்தடைந்த போது, கிரீன் குழும இணை நிறுவனர்களான திரு. அனில் சலமலசெட்டி மற்றும் திரு. மகேஷ் கொல்லி ஆகியோர் விமானநிலையத்தில் உடன் இருந்தனர்.

கிரீன்கோ குரூப் திட்டங்கள் குறித்து கிரீன்கோ குரூப் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை நிர்வாக அலுவலர் அனில் சலமலசெட்டி பேசுகையில் “கடந்த இரண்டு வாரங்களாக நாங்கள் கட்டமைத்த வலுவான உலகளாவிய விநியோகச் சங்கிலி மூலமாக ஐந்து சரக்கு விமானங்களில் முதலாவது இங்கு தரையிறங்கியுள்ளது. இன்னும் ஐந்து நாட்களில் ஹைதராபாத், பெங்களூரு, டெல்லி விமான நிலையங்களில் மீதமுள்ள நான்கு சரக்கு விமானங்கள் 1,000 மிகப்பெரிய மருத்துவ தரமுள்ள ஆக்சிஜன் செறிவூட்டிகளுடன் தரையிறங்கும். கோவிட் இரண்டாவது அலையால் நமது சுகாதார பராமரிப்பு கட்டமைப்பு மற்றும் ஆதரவு அமைப்புகளின் மீது அழுத்தம் கூடியிருக்கும் நிலையில் அதனை எதிர்க்கவும், 2-ம் நிலை மற்றும் 3-ம் நிலை நகரங்களில் ஐசியூவுக்கு முந்திய நிலை மற்றும் ஐசியூவுக்கு பிறகு நோயாளிகளின் நிலைத்தன்மை ஆகியவற்றில் நமது மருத்துவக் குழுவுக்கு உதவும் வகையில் இது பயன்படும். நோய்த்தொற்றுக்கு எதிராக போராடும் முயற்சிகளுக்கு உதவி செய்து, இந்தியா மீண்டும் இயல்பாக இயங்குவதற்கான எங்களது முயற்சிகளைத் தொடர்வோம்” என்று தெரிவித்தார்.

கிரீன்கோ நிறுவனர்களின் முயற்சிகளுக்கு நன்றி தெரிவித்துப் பேசிய அமைச்சர் கே.டி.ராமாராவ்,

“ஒரு அரசாக, வர்த்தக நிறுவனங்களின் தலைவர்களாக, பொறுப்புமிக்க குடிமக்களாக, நோயாளிகளுக்கு உரிய நிவாரணத்தை வழங்குவதற்கே முதல் முன்னுரிமை அளிப்போம்; எங்களால் முடிந்தவரை விவேகமாகவும் நியாயமாகவும் இந்த ஆக்சிஜன் பிரச்சனையைத் தவிர்ப்போம்.உண்மையில், இந்த முயற்சிகளுக்கு உதவியதற்காக கிரீன்கோ குரூப்புக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்” என்றார்.

மேலும், 50 லிட்டர்கள் திறன் கொண்ட 1,000 மிகப்பெரிய ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து இன்னும் சில வாரங்களில் இந்தியா வந்து சேரும். ஆக்சிஜன் பற்றாக்குறையால் அவதிப்படும் நோயாளிகளுக்கு உதவும் விதமாக இவை அனைத்தும் சிறு அலகுகளாகப் பிரிக்கப்பட்டு மருத்துவமனைகள், சுகாதார பராமரிப்பு நிலையங்கள் மற்றும் மொபைல் யூனிட்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.

இந்தியாவின் மிகப்பெரிய தூய்மை ஆற்றல் நிறுவனங்களில் ஒன்றாக விளங்கும் கிரீன்கோ குரூப் ராஜதந்திர, புவிசார் அரசியல் மற்றும் செயல்பாட்டு அமைப்புகளைத் தூண்டுவதன் மூலமாக நம்பகமான மற்றும் நடுத்தர கால வினியோக சங்கிலிகளை நிறுவுவதில் கவனம் செலுத்தி வருகிறது. இதன் மூலமாக இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களுக்கு ஆக்சிஜன் செறிவூட்டிகள் மற்றும் ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் உள்ளிட்ட அத்தியாவசிய அம்சங்கள் விநியோகிப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இது பற்றி பேசிய அனில் சலமலசெட்டி, “ஒரு நாடு என்ற முறையில் ஆபத்துக்கால பண உதவி மற்றும் பணம் சார்பில்லாத இதர உதவிகளை தொண்டுஃ நன்கொடை என்ற பெயரில் பெறுவதற்கு அதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டும். அதேநேரத்தில் வட்டார மற்றும் உலகளாவிய அளவில் ஆபத்துக்கால சாதனங்கள் மற்றும் பொருட்களைப் பெறும் நோக்கத்தோடு வலுவான விநியோகச் சங்கிலி அமைப்பை உருவாக்குவதில் நாம் கவனம் செலுத்த வேண்டும். கிரீன்கோ குரூப்பில் உருவாக்கப்பட்ட விநியோகச் சங்கிலி அமைப்பானது 5,000-க்கும் மேற்பட்ட செறிவூட்டிகள் மற்றும் சிலிண்டர்களை தொடர்ச்சியாக சப்ளை செய்யும் திறன் கொண்டது. இது நோய்த்தொற்றை எதிர்த்து இந்தியா போராடவும் மீண்டும் சுதந்திரக் காற்றை சுவாசிக்கவும் கண்டிப்பாக உதவும்” என்றார்.

மேலும் படிக்க