• Download mobile app
17 May 2024, FridayEdition - 3019
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கிராமம் இல்லாவிட்டால் நகரம் இல்லை; மாநகரங்கள் இல்லை – முக.ஸ்டாலின்

January 9, 2019 தண்டோரா குழு

கிராமம் இல்லாவிட்டால் நகரம் இல்லை; மாநகரங்கள் இல்லை திமுக தலைவர் முக ஸ்டாலின் கூறியுள்ளார்.

மக்களிடம் செல்வோம், மக்களிடம் சொல்வோம், மக்களின் மனங்களை வெல்வோம்” என்ற கொள்கை முழக்கங்களுடன் தமிழகம் முழுவதும் தி.மு.க. சார்பில் ஊராட்சி சபைக் கூட்டம் நடைபெறும் என அக்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின் முன்னதாக அறிவித்திருந்தார். இதையடுத்து இன்று முதல் தொடங்கி வருகிற பிப்ரவரி 17 ஆம் தேதி வரை இந்த கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், திருவாரூர் அருகே புலிவலத்தில் ஊராட்சி சபை கூட்டத்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து பேசினார்.

அப்போது பேசிய முக.ஸ்டாலின்,

“நான் ஒரு கோவிலுக்கு வந்ததை போன்று உணர்கிறேன். கிராமம் தான் கோவில். மகாத்மா காந்தி கூட கிராமத்தை தான் கோவில் என்று தான் கூறுவார். அரசியலே இதுபோன்ற கிராமங்களில் தான் உருவாகியுள்ளது. கிராமங்கள் தான் நாட்டின் உயிர்நாடி. கிராமம் இல்லாவிட்டால் நகரம் இல்லை; மாநகரங்கள் இல்லை

மக்களால் தேர்தெடுக்கப்பட்டவர்கள் லோக்சபா எம்.பிக்கள். எம்.எல்.ஏக்களால் தேர்தெடுக்கப்படுவர்கள் ராஜ்ய சபா எம்.பிக்கள். எம்.பிக்கள் டெல்லியில் நாடாளுமன்றத்தில் மக்களுக்காக குரல் கொடுக்கிறார்கள். ஆனால் அனைத்திற்கும் காரணமான எம்.எல்.ஏக்களை தேர்தெடுப்பது நீங்கள் தான். மத்தியில் எம்மாதிரியான ஆட்சி நடைபெற்று கொண்டிருக்கிறது என்பது உங்களுக்கே தெரியும். படித்தவர்கள் அதிகமாக வாக்கு செலுத்த வருவதில்லை. ஆனால் அவர்கள் தான் அதிகளவில் குறைகளை சொல்வார்கள்.

மத்திய அரசின் கைப்பாவையாக தேர்தல் ஆணையம் செயல்படுகிறது. பல்ஸ் பார்ப்பதற்காகவே திட்டமிட்டு திருவாரூருக்கு மட்டும் இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. பாஜக மத்தியில் ஆட்சி வந்ததற்கு பிறகு சோதனைகள் அதிகமாகி விட்டன. பெரிய முதலாளிகளுக்காக பிரதமர் மோடி ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறார்.

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் படிக்க