• Download mobile app
25 Apr 2024, ThursdayEdition - 2997
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசை கண்டித்து ரயில் நிலையத்தை முற்றுகையிட முயன்ற மஜகவினர் கைது

August 9, 2019 தண்டோரா குழு

காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசை கண்டித்து ரயில் நிலையத்தை முற்றுகையிட முயன்ற மனிதநேய ஜனநாயக கட்சியினரை போலீசார் கைது செய்தனர்.

தமிழகம் முழுவதும் மனிதநேய ஜனநாயக கட்சியினர் மத்திய அரசை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கோவையில் இன்று மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்ட செயலாளர் MH.அப்பாஸ், தலைமையில் கோவை ரயில் நிலைய முற்றுகை போராட்டம் நடைபெற்றது.இதில் கட்சியின் இணைப் பொதுச்செயலாளர் மைதீன்உலவி,துணை பொதுச்செயலாளர் கோவை சுல்தான்அமீர், கண்டன உரையாற்றினர்.

அப்போது காஷ்மீர் மக்களுக்கு ஆதரவாகவும், மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிராகவும் அவர்கள் முழக்கங்கள் எழுப்பினர். ரயில் நிலையத்திற்குள் நுழைய முயன்ற மஜக வினரை காவல் துறையினர் தடுத்தி நிறுத்தி கைது செய்தனர்.இதையடுத்து, முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டோரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் படிக்க