• Download mobile app
14 Jun 2025, SaturdayEdition - 3412
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

காஷ்மீர் தாக்குதல்: ராணுவத்தில் சேர குவிந்த இளைஞர்கள் விண்ணப்பங்கள்

February 20, 2019 தண்டோரா குழு

காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில் தற்கொலைப் படையினரால் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதல் நடந்து ஒரு சில தினங்களே ஆன நிலையில், ராணுவத்தில் இணைய ஆயிரக்கணக்கில் இளைஞர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

பாரமுல்லா பகுதியில் 111 பணியிடங்களுக்கு, 2,500 இளைஞர்கள் விண்ணப்பித்துள்ளனர். இதில், வழக்கத்திற்கு மாறாக ராணுவத்தில் சேர்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதற்கு, அப்பகுதியில் நிலவும் வேலை வாய்ப்பின்மையும் ஒரு காரணமாக பார்க்கப்படுகிறது. ஆகையால், எந்த வேலை கிடைத்தாலும் தற்போதைய சூழலில் போதும் என்ற மனநிலையில் ஜம்மு காஷ்மீர் மாநில இளைஞர்கள் இருப்பதாக கூறப்படுகிறது.

ராணுவத்தில் சேர சி.டி.எஸ். தேர்வில் பங்கேற்க வேண்டும். பின் மருத்துவம், உடல் தகுதி தேர்வுகள் நடக்கும். தேர்ச்சி பெற்றவர்கள் ஸ்டாஃப் செலெக்‌ஷன் போர்டு நடத்தும் நேர்முக தேர்வில் பங்கேற்பார்கள். இதில், தேர்வானவர்களுக்கு சம்பந்தப்பட்ட இன்ஸ்டியூட்டில் இருந்து அழைப்பு வரும். மேலும், மூன்று வகைகளில் பெண்கள் தேர்வாகிறார்கள். அவை, தொழில்நுட்பம், தொழில்நுட்பமில்லாத பிரிவு, சட்டம் ஆகியவை ஆகும்.

குறிப்பாக, ஒவ்வொரு ராணுவ வீரர்களும் தங்கள் உயிரை பணயம் வைத்தே வேலை செய்கிறார்கள். இன்றோ, நாளையோ தாக்குதல் நடைபெறலாம். அப்படியிருக்க, தேசப்பற்று இல்லாத ஒருவரால் எப்படி அந்த பணியில் இணைய முடியும். ஆகையால், வேலை வாய்ப்பின்மையும் ஒரு காரணமாக இருக்கலாம். அதுவே, முழுமைக்கும் காரணமாக இருக்க வாய்ப்பில்லை.

மேலும் படிக்க