• Download mobile app
21 Mar 2026, SaturdayEdition - 3692
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

காஷ்மீரில் ஆளுநர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் : உமர் அப்துல்லா

June 19, 2018 தண்டோரா குழு

காஷ்மீரில் எந்தக் கட்சிக்கும் ஆட்சி அமைக்கும் பலம் இல்லாததால் ஆளுநர் ஆட்சிதான் ஒரே தீர்வு என தேசிய மாநாடு கட்சித் தலைவர் உமர் அப்துல்லா கூறியுள்ளார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் மக்கள் ஜனநாயகக் கட்சி மற்றும் பாஜக கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது.இதில்,மக்கள் ஜனநாயகக் கட்சியின் மெஹபூபா முஃப்தி முதல்வராக ஆட்சி செய்து வருகிறார்.

இந்நிலையில்,அண்மைக்காலமாக காஷ்மீரில் நிலவும் சூழல் காரணமாக இரு கட்சிகளிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.மேலும்,பயங்கரவாதம்,வன்முறை,பத்திரிகையாளர் சுடப்பட்டது உள்ளிட்ட நிகழ்வுகள் கூட்டணியை பாதித்தன.இதற்கிடையில், ஜம்மு – காஷ்மீர் அரசுக்கு பா.ஜ.க அளித்து வந்த ஆதரவை திரும்ப பெற்றது.இதனால்,அம்மாநிலத்தில் முதலமைச்சர் மெகபூபா முஃப்தி தலைமையிலான அரசு பெரும்பான்மையை இழந்தது.

இதனால், மெகபூபா முஃப்தி பதவியை ராஜினாமா செய்வதாக தெரிவித்து, தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநருக்கு அனுப்பியுள்ளார்.இந்நிலையில், காஷ்மீரில் ஆட்சி அமைக்கும் அளவுக்கு தமது கட்சிக்கு எம்.எல்.ஏ.க்கள் இல்லை.ஆட்சி அமைக்க ஆதரவு கோரி வேறு கட்சிகள் தம்மை தொடர்பு கொள்ளவில்லை.காஷ்மீரில் எந்தக் கட்சிக்கும் ஆட்சி அமைக்கும் பலம் இல்லாததால் ஆளுநர் ஆட்சிதான் ஒரே தீர்வு.

ஆளுநர் என்.என்.வோராவைச் சந்தித்த போதே தமது நிலையை கூறிவிட்டதாக தேசிய மாநாடு கட்சித் தலைவர் உமர் அப்துல்லா பேட்டியளித்துள்ளார்.ஆனால் நீண்ட நாட்களுக்கு ஆளுநர் ஆட்சி தொடரக் கூடாது என்பதையும் தெரிவித்துள்ளோம் என உமர் அப்துல்லா கூறியுள்ளார்.

மேலும் படிக்க