• Download mobile app
20 May 2024, MondayEdition - 3022
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

காவிாி விவகாரம் தொடர்பாக 4 மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அழைப்பு

March 5, 2018 தண்டோரா குழு

காவிரி விவகாரத்தில் மார்ச் 9 இல் ஆலோசனை நடத்த வருமாறு 4 மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.

காவிரி நதிநீா் தொடா்பாக உச்ச நீதிமன்றம் கடந்த மாதம் 16-ம் தேதி தீர்ப்பு வழங்கியது.மேலும் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை 6 வார காலத்தில் அமைக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

இந்நிலையில்,காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க எவ்வித நடவடிக்கையும் மத்திய அரசு எடுக்கவில்லை என்று தமிழகத்தில் விவசாயிகள் மற்றும் அரசியல் தலைவர்கள் குற்றம்சாட்டி வந்தனர்.

இந்நிலையில்,தமிழகம்,கர்நாடகம்,கேரளா,புதுச்சேரி மாநிலஅரசுகளுடன் ஆலோசனை நடத்த மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க