March 29, 2018
தண்டோரா குழு
காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி வாரியம் அமைப்பதே சரியான தீர்வு என ரஜினிகாந்த் கூறியுள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியத்தை 6 வாரங்களுக்குள் அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியிருந்தது.எனினும், இதுவரை வாரியம் அமைக்கப்படவில்லை. இதனைதொடர்ந்து தமிழக எம்பிக்களும் நாடளுமன்றத்தை முடக்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், தமிழக சட்டப் பேரவையிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் ”காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி மேலாண்மை வாரியம் அமைப்பது ஒன்று மட்டுமே நாம் ஏற்றுக்கொள்ளக்கூடிய நியாயமான தீர்வாக இருக்க முடியும்” எனக் கூறியுள்ளார்.