• Download mobile app
12 May 2024, SundayEdition - 3014
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை அவையை நடத்த விடமாட்டோம் – தம்பிதுரை எம்.பி

March 19, 2018 தண்டோரா குழு

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை அவையை நடத்த விடமாட்டோம் என்று மக்களவை துணை சபா நாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி நாடாளுமன்ற வளாகத்தில் 11வது நாளாக அதிமுக எம்.பி.க்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். தமிழக உரிமையை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காகவே போராடி வருகிறோம்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு மத்திய அரசு செவி சாய்க்கவில்லை.காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதாக மத்திய அரசு உறுதி அளித்தால் மட்டுமே அவையை நடத்த விடுவோம் என்று கூறியுள்ளார்.

மேலும் படிக்க