• Download mobile app
24 May 2025, SaturdayEdition - 3391
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை ஓய மாட்டோம் – எஸ்.பி.வேலுமணி

April 3, 2018 தண்டோரா குழு

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை ஓய மாட்டோம்,தொடர் போராட்டம் நடைபெறும் என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி காவிரி மேலாண்மை  வாரியம் உடனே அமைக்க கோரி கோவை மாவட்ட அதிமுக சார்பாக,காந்திபுரத்தில் இன்று உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது.இந்த உண்ணாவிரத போராட்டத்தில் தொண்டர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

அப்போது பேசிய சட்டமன்ற அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறுகையில்,

காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் முறைப்படுத்தும் குழு அமைக்க கோரி கோவையில் மாபெரும் உண்ணாவிரதம் அறப்போராட்டம் நடைபெறுகிறதாகவும், உணர்வுபூர்வமாக எழுச்சியாக போராட்டம் நடைபெறுகிறதாகவும் தெரிவித்தார்.

மத்திய அரசு உடனடியாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை ஓய மாட்டோம்,தொடர் போராட்டம் நடைபெறும் என தெரிவித்தார். மேலும் அதிமுகவினர் உணர்வுபூர்வமாக போராடி வருவதாகவும், திமுக அரசியலுக்காக போராடுவதாகவும் விமர்சித்துள்ளார்.

காவிரி மேலாண்மை  வாரியம் அமைக்காமல் இவ்வளவு பிரச்சனைக்கும் திமுக தான் காரணம் என குற்றம்சாட்டிய அவர், திமுக வானளாவி அதிகாரத்தில் இருந்த போதும் வாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் தற்போது அரசியலுக்காக போராடுவதாக குற்றம்சாட்டினார். சாதனை படைக்கும் வகையில் அதிமுக சார்பாக நடைபெற்றும் உண்ணாவிரத போராட்டதில் கூட்டம் வந்துள்ளதாகவும், அடுத்த கட்ட முடிவுகள் குறித்து கழக ஒருங்கிணைப்பளர் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் முடிவு எடுப்பார்கள் எனவும் தெரிவித்தார்.

இந்த உண்ணாவிரத போரட்டத்தில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி , சட்டமன்ற உறுப்பினர் , மற்றும் தொண்டர்கள் என பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.

மேலும் படிக்க