• Download mobile app
06 Nov 2025, ThursdayEdition - 3557
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி ஏப். 2ம் தேதி அதிமுக உண்ணாவிரதம் – ஓ.பி.எஸ்

March 30, 2018 தண்டோரா குழு

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்து ஏப்ரல் 2 ஆம் தேதி தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என்று துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

மறைந்த முதல்- அமைச்சர் ஜெயலலிதாவின்  70-வது பிறந்த தினத்தை முன்னிட்டு, 120  ஏழை ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் கலந்து கொண்டு திருமண விழாவை நடத்தி வைத்தனர்.

இந்நிகழ்ச்சியில் பேசிய துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம்

“தமிழகத்தின் வாழ்வாதாரமான காவிரியின் உரிமையை அதிமுக ஒரு நாளும் விட்டுக் கொடுக்காது.அதிமுகவின் அறப்போராட்டத்தில் மக்கள் பங்கேற்று வெற்றி பெற செய்ய வேண்டும்.அதிமுகவின் இந்த உண்ணாவிரதப் போராட்டம் நாடு முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தும்”.என்றார்.

மேலும் படிக்க