• Download mobile app
01 May 2024, WednesdayEdition - 3003
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

காவிரி மேலாண்மை வாரியம்:நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர தமிழக அரசு முடிவு

March 27, 2018 தண்டோரா குழு

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக மத்திய அரசு எந்த அறிவிப்பும் வெளியிடாததால் அவமதிப்பு வழக்கு தொடர தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

காவிரி நதிநீர் வழக்கில் காவிரி மேலாண்மை வாரியத்தை 6 வாரத்திற்குள் அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்கான காலக்கெடு வரும் 29-ம் தேதியுடன் முடிவடைகிறது.இதனையடுத்து தமிழக பொதுப்பணித்துறை செயலர் பிரபாகர் தொழில்நுட்பக்குழு தலைவர் சுப்பிரமணியன் உட்பட அதிகாரிகள் புதுடில்லியில் வழக்கறிஞர் சேகர்நாப்தே-வை சந்தித்து கலந்தாலோசித்தனர்.

இதனைத் தொடர்ந்து சனிக்கிழமை மார்ச் 31-ம் தேதி  உச்சநீதிமன்றத்தில்  நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர சேகர்நாப்தே தமிழக அரசுக்கு பரிந்துரைத்துள்ளார். இதையடுத்து, காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக மத்திய அரசு எந்த அறிவிப்பும் வெளியிடாததால் அவமதிப்பு வழக்கு தொடர தமிழக அரசு முடிவுசெய்துள்ளது.

மேலும் படிக்க