March 3, 2018
தண்டோரா குழு
காவிரி பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என்பதே திமுகவின் நோக்கம் என்று தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
காவிரி விவகாரம் தொடா்பாக அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ள தமிழக எதிர்க்கட்சி தலைவா் மு.க.ஸ்டாலின் மற்றும் துரைமுருகன் உள்ளிட்டோர் இன்று தலைமைச் செயலகத்தில் முதல்வரை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டனா்.
பின்னர் முதலமைச்சருடனான சந்திப்புக்கு பின் பேசிய மு.க.ஸ்டாலின்,
காவிரி பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என்பதே திமுகவின் நோக்கம்.காவிரி விவகாரத்தில் அனைத்து கட்சி கூட்டத்தினரை பிரதமர் சந்திக்க மறுப்பது தமிழகத்திற்கு மிகப்பெரிய அவமானம்.காவிரி வாரியம் விவகாரத்தில் மக்களை, விவசாயிகளை ஏமாற்றும் காரியத்தில் மத்திய அரசு ஈடுபடுகிறது.
மேலும்,காவிரி விவகாரத்தில் பிரதமர் சந்திக்க மறுப்பதால் திமுக எம்பிக்கள் ராஜினாமா செய்ய தயார் எனவும், தமிழக பிரதிநிதிகளை திங்கள்கிழமைக்குள் பிரதமர் சந்திக்கவில்லையெனில் சட்டப்பேரவையைக் கூட்ட நடவடிக்கை எடுப்போம் என்று கூறியுள்ளார்.