• Download mobile app
14 May 2024, TuesdayEdition - 3016
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

காவிரி நீரை கேட்பதற்கு முன், கர்நாடக அணைகளை வந்து பார்க்கவும் – ரஜினிக்கு குமாரசாமி அழைப்பு

May 21, 2018 தண்டோரா குழு

தமிழகத்திற்காக நீர் கேட்பதற்கு முன்னர் கர்நாடக அணைகளில் நீர் உள்ளதா என்பதை பார்க்க ரஜினிகாந்த் கர்நாடகா வர வேண்டும் என மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.

கர்நாடகாவில் காங்கிரஸ் – மஜத கூட்டணி ஆட்சி அமையவுள்ளது. ம.ஜ.த தலைவர் கர்நாடக முதல்வராக பதவியேற்க உள்ளார். இதற்கிடையில், சென்னையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த், கர்நாடகாவில் பதவியேற்க உள்ள புதிய அரசு காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி செயல்பட வேண்டும் என கூறியிருந்தார்.

இந்நிலையில் பெங்களூருவில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய குமாரசாமி,

கர்நாடகத்தில் உள்ள அணைகளில் நீர்இருப்பு குறைவாக உள்ள நிலையில், தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடுவது சாத்தியமில்லை. தண்ணீர் திறந்துவிடுமாறு கூறும் ரஜினிகாந்த், கர்நாடகத்துக்கு வந்து அணைகளின் நீர்இருப்பை பார்வையிடுமாறு அழைப்புவிடுக்கிறேன்.கர்நாடக விவசாயிகளின் நிலையை அறிந்துகொள்ளுமாறும், அதனைத்தொடர்ந்து, கர்நாடக அணைகளிலிருந்து தண்ணீர் திறந்துவிட வேண்டுமா என்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி முடிவுக்கு வரலாம் என்றும் குமாரசாமி தெரிவித்தார்.

மேலும் படிக்க