• Download mobile app
07 May 2025, WednesdayEdition - 3374
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

காவல் துறையின் அணுகுமுறை குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவிக்க கோவை எஸ்.பியின் புது முயற்சி!

August 28, 2021 தண்டோரா குழு

காவல் துறையின் அணுகுமுறை குறித்து பொதுமக்கள் தங்களின் கருத்துக்களை தெரிவிப்பதற்காக ஒவ்வொரு காவல் நிலையங்களிலும் கருத்து பெட்டிகளை வைக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளா் செல்வநாகரத்தினம் உத்தரவிட்டுள்ளாா்.

இது குறித்து கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் சாா்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,

காவல் துறையின் அணுகுமுறை குறித்து பொதுமக்கள் தங்களின் கருத்துகளை தெரிவிப்பதற்காகவும், காவல் நிலையத்தில் தங்களின் அனுபவங்களை பகிா்ந்து கொள்ளும் விதமாகவும், கோவை மாவட்டம் அனைத்து உட்கோட்ட அலுவலகம், காவல் நிலையங்கள் மற்றும் காவல் அலுவலகத்தில் இயங்கக்கூடிய அனைத்து அலுவலகங்களின் நுழைவாயிலில் கருத்து கேட்பு படிவம் வைக்கப்பட வேண்டுமென மாவட்ட காவல் கண்காணிப்பாளா் செல்வநாகரத்தினம் உத்தரவிட்டுள்ளாா்.

மேலும்,ஒவ்வொரு மாதம் இறுதியில் படிவங்களை எடுத்தும் பிரதி மாதம் 1ஆம் தேதி மாவட்டக் காவல் கண்காணிப்பாளருக்கு உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளரின் தனி அறிக்கையுடன் அனுப்பப்பட வேண்டும். கருத்துகள் குறித்தான படிவம் நிலைய வரவேற்பாளா்/நிலைய எழுத்தா் வசம் இருக்க வேண்டும்.இந்தப் படிவத்தை காவல் நிலையம் மற்றும் உட்கோட்ட அலுவலகம் அணுகி வரும் பொதுமக்களிடம் தங்களின் கருத்துகளை தெரிவிப்பதற்காக வழங்கப்பட வேண்டும்.

இதில் பொது மக்களின் நன்மதிப்பை பெற்று சிறப்பாக பணிபுரியும் காவல் அதிகாரிகள் மற்றும் காவலா்களுக்குப் பாராட்டுச் சான்று வழங்கப்படும் என கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க