• Download mobile app
19 Sep 2025, FridayEdition - 3509
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டு இயக்கம் சார்பில் கோவையில் கண்டன ஆர்ப்பாட்டம்

August 3, 2020 தண்டோரா குழு

காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டியக்கம் சார்பில் கோவை மாவட்டத்தில் காந்திபுரம் தந்தை பெரியார் சிலை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் 20க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு காவல்துறை சித்திரவதை செய்வதை கண்டித்தும் அதற்கு எதிராக பதாகைகளை ஏந்தி முழக்கங்களை எழுப்பினர்.

தென்காசி அணைக்கரை விவசாயி முத்துவை படுகொலை செய்த வனத்துறை காவலர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்றும் ராணிப்பேட்டை ஷாலினி மற்றும் அவரது குழந்தையை சட்டவிரோதமாக கைது செய்து சித்திரவதை படுத்திய காட்பாடி காவல்துறை ஆய்வாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சாத்தான்குளம் சம்பவத்தில் சம்பந்தப்பட்ட அரசு மருத்துவர் வெண்ணிலா நீதித்துறை நடுவர் சரவணன் ஆகியோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மேலும் படிக்க