• Download mobile app
05 Nov 2025, WednesdayEdition - 3556
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

காவல்துறைக்கு கமல் பாராட்டு !

November 4, 2017 தண்டோரா குழு

மழை வெள்ள நிவாரண பணியில் ஈடுபட்டுள்ள காவல்துறைக்கு கமல்ஹாசன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக சென்னை உள்ளிட்ட மூன்று மாவட்டங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகின்றன. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வழங்க அதிக அளவு போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதற்காக காவல்துறைக்கு கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் பாராட்டு தெரிவித்து உள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், காவல்துறை பணிகளுக்கு இடையே நிவாரணப் பணியில் ஈடுபடும் காவல்துறையினருக்கு நன்றி. சீருடை அணிந்தாலும் அணியாவிட்டாலும் அவர்கள் சிறந்த குடிமகன்களாக ஒளிருக்கின்றனர்.இது போன்று தமிழர்களும் ஈடுபடவேண்டும் எனக் கூறியுள்ளார்.

மேலும், மற்றொரு டுவீட்டில், இயக்க தொண்டர்கள் எப்போதும் மழை கால உதவிகளை செய்யும் போது அரசு பணியாளர்களுக்கு இடையூரோ கேலியோ செய்யாமல் உதவுங்கள். ஆபத்திற்கு பாவமில்லை எனக் கூறியுள்ளார்.

மேலும் படிக்க