• Download mobile app
09 May 2026, SaturdayEdition - 3741
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

காவலருக்கு கொரோனா; தனியார் மண்டபத்திற்கு மாற்றப்பட்ட குனியமுத்தூர் காவல் நிலையம்

April 25, 2020 தண்டோரா குழு

குனியமுத்தூர் காவலர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நிலையில் குனியமுத்தூர் காவல் நிலையத்தை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

மக்களை அச்சுறுத்தி வரும்கொரோனா வைரஸ் தொற்றால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்திரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.அத்தியாவசிய தேவைகளை தாண்டி வெளியே சுற்றி திரிபவர்கள் மீறி காவல்துறை பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.

கோவையில் அன்னூர் காவல் நிலைய பெண் காவலருக்கு ஏற்கனவே கொரொனா உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் நேற்று போத்தனூர் காவல் நிலையத்தில் 2 பெண் காவலர்கள் உட்பட 4 போலீசாருக்கும், ஒரு ஆயுதப் படைக் காவலருக்கும், குனியமுத்தூர் காவல் நிலைய காவலருக்கும் கொரோனா நோய் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.இவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதன் காரணமாக அங்கு பணியாற்றிய காவலர்கள் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ள வலியுறுத்தப் பட்டுள்ளது.மேலும்,தற்காலிகமாக போத்தனூர் காவல் நிலையம் வேறு இடத்தில் சில நாட்களுக்கு இயங்கும் என மாநகர காவல் ஆணையர் சுமித்சரண் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் குனியமுத்தூர் காவலர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நிலையில் குனியமுத்தூர் காவல் நிலையத்தை தற்காலிகமாக மூட மாநகர காவல் துறை நடவடிக்கை எடுத்து உள்ளது.அந்த காவல் நிலையம் குனியமுத்தூர் குமரன் மஹாலில் செயல்படுகின்றது.நேற்று போத்தனூர் காவல் நிலையம் மூடப்பட்ட நிலையில் இன்று குனியமுத்தூர் காவல் நிலையம் மூடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க